இலங்கை செய்தி

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு தப்பிச் சென்று நடுக்கடலில் மாட்டிக்கொண்ட தமிழர்கள்

  • April 12, 2023
  • 0 Comments

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலொன்றில் மறைந்திருந்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற நால்வரை காலி துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளனர். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 25, 31 மற்றும் 32 வயதுடைய இருவர் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் ஏறி சந்தேகநபர்கள் குழு மறைந்துள்ளனர். பின்னர் கப்பல் பயணிக்கத் தொடங்கியது மற்றும் கப்பலின் கேப்டன் சூயஸ் கால்வாய் […]

இலங்கை செய்தி

இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான வேன் மோதி விபத்து!! ஒருவர் உடல் நசுங்கி பலி

  • April 12, 2023
  • 0 Comments

மொரட்டுவ பிரதேசத்தில் இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான வேன் மோதியதில் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர் 58 வயதான பாணந்துறை ஹொரேதுடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். விபத்திற்குள்ளான வேன் சைக்கிளில் பயணித்தவர் மீதும், சாலையோரம் நடந்து சென்ற பாதசாரிகள் மீதும் மோதி நின்றது. விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் […]

இலங்கை செய்தி

இலங்கையில் இன்புளுவன்சா காய்ச்சல் பரவும் அபாயம்

  • April 12, 2023
  • 0 Comments

இன்புளுவன்சா காய்ச்சல் மீண்டும் நாடு முழுவதும் வேகமாக பரவும் அபாயம் உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுவாச அமைப்பு தொடர்பான இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதிக காய்ச்சல், தசைவலி, மூக்கில் நீர் வடிதல், தொண்டை புண் மற்றும் சளி போன்றவை இந்நிலையின் அடிப்படை அறிகுறிகளாகும் என விசேட வைத்திய நிபுணர் டாக்டர் பிரியங்கர ஜயவர்தன கூறுகிறார். இதேவேளை, காலி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வருடத்தின் கடந்த மூன்றரை […]

இலங்கை செய்தி

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது – விமல்

  • April 12, 2023
  • 0 Comments

அரசாங்கத்துக்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். நுகேகொடை பகுதியில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்துவதை தவிர மாற்றுத்திட்டங்கள் ஏதும் அரசாங்கத்திடம் கிடையாது. தேசிய தொழிற்துறையை மேம்படுத்துவது தொடர்பில் நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டங்களும் செயற்படுத்தப்படவில்லை. […]

இலங்கை செய்தி

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டில் மிக மோசமான நிலையை ஏற்படுத்தும் – சாலிய பீரி

  • April 12, 2023
  • 0 Comments

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அனுமதிக்கப்பட்டால் நாட்டில் மிக மோசமான நிலைமை ஏற்படுவதற்கு இடமிருக்கிறது. குறிப்பாக பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு வரையறை அற்ற அதிகாரம் வழங்குவது மிகவும் பயங்கரமானது என சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார். உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  ”அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஊடாக பிரதி பொலிஸ்மா அதிபருக்கு வரையறை இல்லாத அதிகாரம் வழங்கி இருக்கிறது. […]

இலங்கை செய்தி

குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்ய அனுமதி!

  • April 12, 2023
  • 0 Comments

நாட்டிற்கு வரும் வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தற்போதைய எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான ஒப்பந்தங்கள் இம்மாத இறுதியில் பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் சினோபெக்  ஆஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் என்ற மூன்று நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைவதற்கு […]

இலங்கை செய்தி

நிறுத்தாமல் சென்ற கார்.. துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார்

  • April 12, 2023
  • 0 Comments

பொல்கஹவெல – குருநாகல் வீதியில்  போதைப்பொருளைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் கார் மீது ​பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால்  அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று (10) காலை 11.00 மணியளவில்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டபோதும் அக்காரானது நிறுத்தாமல் சென்றுள்ளது. இத​னையடுத்து பொலிஸார்  அக்கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவே அக்காரை விட்டு மூவர் தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். இதனையடுத்து குறித்த மூவரையும் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக […]

இலங்கை செய்தி

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் 8.2 மில்லியன் ரூபாவை சம்பாதித்த இருவர் கொழும்பில் கைது!

  • April 12, 2023
  • 0 Comments

கொழும்பு கெசல்வத்தை   டாம் வீதியில் 8.2 மில்லியன் ரூபாய் பணத்துடன் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் 8.2 மில்லியன் ரூபாவை சம்பாதித்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே விசேட அதிரடிப்படையினரால் இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான இருவரில் முக்கிய சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என்றும்  மற்றைய நபர் வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடையவர் […]

இலங்கை செய்தி

புத்தாண்டின் பின்னர் கட்சித்தாவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

  • April 12, 2023
  • 0 Comments

புதுவருடத்தின் பின்னர் ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார தெரிவித்துள்ளார். கட்சித்தாவல் இடம்பெறவுள்ளதை எங்களால் மறுக்க முடியாது ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பக்கம் செல்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரட்ண எப்போதும் கட்சிதாவும் நோக்கத்துடனேயே உள்ளார் அமைச்சு பொறுப்பை ஏற்பதுகுறித்தும் ஆர்வமாக உள்ளார் என நளின் பண்டார தெரிவித்துள்ளார். ராஜித எப்போதும் […]

இலங்கை செய்தி

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு!

  • April 12, 2023
  • 0 Comments

கடந்த வாரத்துடன் (06) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி  311.63 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி  327.72 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் இன்று சற்று அதிகரித்துள்ளது.  

error: Content is protected !!