#SwitzerlandFire #CransMontana #Switzerland #BreakingNews #SkiResortFire #Valais #StephaneGanzer #NewYearTragedy2026 ஐரோப்பா

சுவிட்சர்லாந்து விபத்து: தீப்பிழம்புகளால் உருவான திடீர் வெடிப்பு – பாதுகாப்பு அதிகாரி புதிய தகவல்.

  • January 2, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana ) நகரில் உள்ள ‘லே கான்ஸ்டலேஷன்’ (Le Constellation) என்ற மதுபான விடுதியில் (Bar), ஜனவரி 1, 2026 அன்று அதிகாலை சுமார் 1:30 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. புத்தாண்டைக் கொண்டாட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடியிருந்தபோது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து சுவிட்சர்லாந்து வரலாற்றிலேயே மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விபத்தில் சுமார் […]

உலகம் செய்தி

நைஜீரியாவில் பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர் கார் விபத்து – ஓட்டுநர் கைது

  • January 1, 2026
  • 0 Comments

நைஜீரியாவில்(Nigeria) ஒரு பயங்கர விபத்தில் சிக்கிய பிரிட்டிஷ்(British) குத்துச்சண்டை வீரர் ஆந்தனி ஜோசுவா(Anthony Joshua) சென்ற காரின் ஓட்டுநர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். லாகோஸ் – இபாடன்(Lagos-Ibadan) அதிவேக நெடுஞ்சாலையின் மாகுன்(Makun) பகுதியில் அவர் பயணித்த லெக்ஸஸ்(Lexus) ரக சொகுசு கார் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது காரில் பயணித்த ஆந்தனி ஜோசுவாவின் இரண்டு நண்பர்களான லத்தீஃப் அயோடெல்(Latif Ayodele) மற்றும் சினா […]

உலகம் செய்தி

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோவின் வீட்டுக் காவலுக்கான கோரிக்கை நிராகரிப்பு

  • January 1, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை(Jair Bolsonaro) சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்ற வேண்டும் என்ற அவரது பாதுகாப்புக் குழுவின் கோரிக்கையை பிரேசிலிய(Brazil) கூட்டாட்சி உச்ச நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது. ஆட்சிக் கவிழ்ப்பு சதி செய்ததற்காக 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கும் 70 வயதான போல்சனாரோ ​​உடல்நலக் காரணங்களுக்காக வீட்டிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டு அவரது சட்டக் குழு ஒரு நாள் முன்னதாக கோரிக்கையை தாக்கல் செய்தது. இருப்பினும், நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை நிராகரித்து […]

ஐரோப்பா செய்தி

செப்டம்பர் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை விதிக்க பிரான்ஸ் திட்டம்

  • January 1, 2026
  • 0 Comments

பிரான்ஸ்(France) செப்டம்பர் 2026 முதல் சமூக ஊடக தளங்களில் இருந்து 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தடை செய்யவும் உயர்நிலைப் பாடசாலைகளில் தொலைபேசிகளை தடை செய்யவும் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் சிறார்களுக்கு இணைய பாதிப்புகளின் தாக்கம் குறித்து அதிகரித்து வரும் பொதுமக்களின் கோபத்துக்கு மத்தியில் வருகிறது. இந்நிலையில், இளைஞர்களிடையே வன்முறைக்கு சமூக ஊடகங்களும் ஒரு முக்கிய காரணம் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்(Emmanuel Macron) தெரிவித்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவைப்(Australia) பின்பற்ற பிரான்ஸ் விரும்புவதாகவும் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியாகடந்த ஆண்டு […]

இந்தியா செய்தி

ஆந்திராவில் 3 மகன்களை கொன்று தற்கொலை செய்து கொண்ட நபர்

  • January 1, 2026
  • 0 Comments

ஆந்திராவின்(Andhra) நந்தியால்(Nandyal) மாவட்டத்தில் ஒரு நபர் தனது மூன்று மகன்களைக் கொன்றுவிட்டு பின்னர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் காவல்துறையினரின் கூற்றுப்படி, குடும்பம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கலாம் இது அந்த நபரை இந்த தீவிர நடவடிக்கைக்கு இட்டுச் சென்றிருக்கலாம் என்று அல்லகட்டாவின்(Allakata) துணை காவல் கண்காணிப்பாளர் கே. பிரமோத் குமார் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதம் அந்த நபரின் மனைவி தூக்குப்போட்டு இறந்ததாகவும் இது குடும்பத்தின் துயரத்தை அதிகரித்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். […]

உலகம் செய்தி

கனடாவின் வான்கூவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானி

  • January 1, 2026
  • 0 Comments

கனடாவின்(Canada) வான்கூவர்(Vancouver) விமான நிலையத்தில் மது அருந்திய நிலையில் பணிக்கு வந்ததாக ஏர் இந்தியா விமானி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இடம்பெற்றுள்ளது. வான்கூவரில் இருந்து டெல்லிக்கு(Delhi) புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தின் விமானி புறப்படுவதற்கு முன்னதாக நடத்தப்பட்ட சோதனையில் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. விமானியின் உடலில் மதுவின் வாசனை வீசுவதை கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உடனடியாகக் கைது செய்துள்ளனர்.

உலகம் செய்தி

வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து நபர் மீது கொடூர தாக்குதல்

  • January 1, 2026
  • 0 Comments

வங்கதேசத்தில்(Bangladesh) மற்றொரு இந்து நபர் ஒரு வன்முறைக் குழுவால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வங்கதேசத்தின் ஷரியத்பூர்(Shariatpur) மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது, மேலும் இது வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தொடர் தாக்குதல்களில் சமீபத்தியது. 50 வயதான கோகோன் தாஸ்(Khokon Das) என்று அடையாளம் காணப்பட்ட நபர் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் ஒரு கத்தியால் குத்தப்பட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் அருகிலுள்ள குளத்தில் குதித்ததால் உயிர் தப்பியுள்ளார். இந்நிலையில், “இதை […]

இலங்கை செய்தி

2025 இல் விபத்துக்களால் 2000 இற்கும் மேற்பட்டோர் பலி – E போக்குவரத்தில் புதிய அம்சங்கள்

  • January 1, 2026
  • 0 Comments

2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் போக்குவரத்து விபத்துகளால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 322 அதிகரித்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 2,287 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக 2,388 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர்  எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார். இருப்பினும், 2025 ஆம் ஆண்டில், உயிரிழப்பு விபத்துகளின் எண்ணிக்கை 2,562 ஆக உயர்ந்து 2,710 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்த இலங்கை பொலிஸாரால் […]

இந்தியா செய்தி

கேரளாவில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த மருத்துவர் உட்பட 7 பேர் கைது

  • January 1, 2026
  • 0 Comments

கேரளாவின்(Kerala) திருவனந்தபுரத்தில்(Thiruvananthapuram) நடந்த ஒரு பெரிய போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஒரு மருத்துவர் மற்றும் இளங்கலை பல் அறுவை சிகிச்சை மாணவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அட்டிங்கல்(Attingal) மற்றும் நெடுமங்காட்(Nedumangad) மாவட்ட போதைப்பொருள் எதிர்ப்பு சிறப்பு நடவடிக்கைப் படைகளின் கூட்டு நடவடிக்கையில் ஒரு வாடகை வீட்டில் இருந்து MDMA மாத்திரை மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் மருத்துவர் விக்னேஷ் தாதன், பல் அறுவை சிகிச்சை மாணவி ஹலீனா, அசிம், அவினாஷ், அஜித், […]

உலகம் செய்தி

சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு 356 மரண தண்டனைகள் நிறைவேற்றம்

  • January 1, 2026
  • 0 Comments

2025ம் ஆண்டில் சவூதி அரேபிய(Saudi Arabia) அதிகாரிகள் 356 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர், இது ஒரே ஆண்டில் நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கைதிகளின் எண்ணிக்கையில் புதிய சாதனையை படைத்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ரியாத்தில்(Riyadh) தொடங்கப்பட்ட போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தான் மரண தண்டனை அதிகரிப்பிற்கு காரணம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டில் மட்டும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் 243 பேர் தூக்கிலிடப்பட்டதாக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. 2024ம் ஆண்டில் […]

error: Content is protected !!