பிரித்தானியாவில் ‘பேய் சிறை’ சர்ச்சை: £100 மில்லியன் வரிப்பணம் வீணாகும் அபாயம்
பிரித்தானியாவின் டார்ட்மூர் சிறைச்சாலையில் நிலவும் நச்சு வாயு அபாயம் தெரிந்திருந்தும், 10 ஆண்டுகால குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நீதியமைச்சின் முடிவினால் வரி செலுத்துவோரின் 100 மில்லியன் பவுண்டுகள் வீணடிக்கப்படவுள்ளதாகப் நாடாளுமன்றக் குழு எச்சரித்துள்ளது. அதிக கதிர்வீச்சு கொண்ட ரேடான் (Radon) வாயு கசிவு காரணமாக 2024-இல் மூடப்பட்ட இந்தச் சிறைக்கு, தற்போது ஒரு கைதி கூட இல்லாத நிலையில் ஆண்டுக்கு 4 மில்லியன் பவுண்டுகள் வாடகை மற்றும் பாதுகாப்பிற்காகச் செலவிடப்படுகிறது. 2033-ஆம் ஆண்டு வரை இந்த ஒப்பந்தத்திலிருந்து […]













