இலங்கை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பௌத்த பிக்கு உட்பட 08 பேருக்கு விளக்கமறியல்!

  • January 14, 2026
  • 0 Comments

திருகோணமலை-பிரதான கடற்கரையில் புத்தர் சிலையை வைத்து மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்திய சந்தேக நபர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்கு பௌத்த பிக்குகளான திருகோணமலை கல்யாண வன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஞ்சப தேரர், திருகோணமலை சுவித வன்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் உட்பட  […]

உலகம்

ஈரான் போராட்டம் – பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக வாக்குமூலம் பதிவு!

  • January 14, 2026
  • 0 Comments

ஈரானில் ஆர்ப்பாட்டம் தொடங்கியதில் இருந்து அரசு ஊடகங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து குறைந்தபட்சம் 97 வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வாக்குமூலங்கள் சித்திரவதை மூலம் பெறப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஈரானிய அதிகாரிகள் அமெரிக்கா அல்லது இஸ்ரேலை குற்றம் சாட்டும் வகையில் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக தற்போது நடந்து வரும் போராட்டங்களுக்கு பின்னால் அமெரிக்காவும், இஸ்ரேலும் இருக்கும் வகையில் திரிபுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஈரானில்  பொருளாதார சரிவு காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள் […]

இலங்கை செய்தி

இலங்கையில் அரச அலுவலகங்களுக்குத் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்

  • January 14, 2026
  • 0 Comments

இலங்கையில் அரச அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் ஊடாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. இன்று காலை பதுளை மாவட்டத் தொழில் காரியாலயத்திற்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. உதவித் தொழில் ஆணையாளர் வழங்கிய தகவலின்படி, பொலிஸார் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் கண்டி மாவட்டச் செயலகம் மற்றும் நாவலபிட்டி பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கும் இதே […]

உலகம் செய்தி

உகண்டாவில் தேர்தல் பதற்றம்: நாடு தழுவிய ரீதியில் இணையச் சேவைகள் முடக்கம்

  • January 14, 2026
  • 0 Comments

உகண்டாவில் நாளை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் இணையம் மற்றும் கையடக்கத் தொலைபேசி சேவைகள் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி யோவேரி முசவேனிக்கு (Yoweri Museveni) எதிராகப் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. எட்டாவது முறையாகப் போட்டியிடும் 81 வயதான முசவேனியின் நீண்டகால ஆட்சிக்கு எதிராக இளைஞர்களும் எதிர்க்கட்சியினரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவே இணையம் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினாலும், போராட்டங்களை ஒடுக்கவே இந்த […]

செய்தி

உக்ரைனுக்கான ஆயுத கொள்வனவு : ஐரோப்பிய நாடுகளுக்குள் எழுந்துள்ள முரண்பாடு!

  • January 14, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் €90 பில்லியன் கடனில் அமெரிக்காவிடம் இருந்து உக்ரைன் ஆயுதங்களை கொள்வனவு செய்வதை பிரான்ஸ் எதிர்த்துள்ளது. ஆயுதங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் ஒரு பகுதியை ஐரோப்பிய பாதுகாப்புத் துறையில் மட்டுமே செலவிட வேண்டும் என்று பிரான்ஸ் விரும்புகிறது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), அமெரிக்காவில் இருந்து பாதுகாப்பு சுதந்திரத்தை ஊக்குவிக்கவும், ஐரோப்பாவின் ஆயுத உற்பத்தியாளர்களை வலுப்படுத்தவும் நீண்டகாலமாக கோரி வருகிறார். இந்நிலையிலேயே மக்ரோன் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்வதை எதிர்த்து வருகிறார். […]

இலங்கை செய்தி

வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை!

  • January 14, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஆஸ்திரேலியாவிடம் இலங்கை அரசாங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் Matthew Duckworth யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரை ramalingam chandrasekar சந்தித்து, அரசியல், பொருளாதார மற்றும் அபிவிருத்தி சார்ந்த முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போதே  ஆஸ்திரேலிய தூதுவரிடம், அமைச்சர் சந்திரசேகர் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார். இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையிலான […]

ஐரோப்பா செய்தி

இஸ்ரேலிய கடவுச்சீட்டு கொண்ட பாலஸ்தீனியருக்கு பிரித்தானியாவில் தஞ்சம்

  • January 14, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய குடியுரிமை கொண்ட பாலஸ்தீனியர் ஒருவருக்கு, பிரித்தானியா அரசு அகதி அந்தஸ்து வழங்கியுள்ளது. இஸ்ரேலில் தமக்கு உயிருக்கு ஆபத்து மற்றும் அடக்குமுறை இருப்பதாக ‘ஹசன்’ (புனைபெயர்) எனும் இளைஞர் தொடர்ந்த வழக்கில், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது. இஸ்ரேலிய கடவுச்சீட்டு வைத்திருக்கும் ஒரு பாலஸ்தீனியருக்கு பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்படுவது இதுவே முதல் முறை என நம்பப்படுகிறது. முன்னதாக, முன்னாள் உள்துறை அமைச்சரின் தலையீட்டால் இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தது. எனினும், இஸ்ரேலில் பாலஸ்தீனியர்கள் […]

இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழுவதற்கு வழிகாட்டும் ஐ.நா.!

  • January 14, 2026
  • 0 Comments

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பாதுகாப்பு அமைச்சகத்தில் நேற்று (14) இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. டித்வா சூறாவளியின் தாக்கங்கள் மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மறுகட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளன. அனர்த்தத்திற்குப் பிந்தைய தேவைகள் மதிப்பீடு (Post-Disaster Needs Assessment – PDNA) தொடர்பான விரிவான விளக்கத்தை ஐ.நா. UNDP அதிகாரிகள் […]

உலகம் செய்தி

தாய்லாந்து ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவு!

  • January 14, 2026
  • 0 Comments

தாய்லாந்தின் Thailand வடகிழக்கு பகுதியில் ரயில்மீது கட்டுமானப் பணிக்காக பயன்படுத்தப்பட்ட பாரிய கிரேன் crane விழுந்ததில் குறைந்தபட்சம் 22 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 80 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பில் முழுமையான விசாரணைக்கு அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பாங்காக்கிலிருந்து Bangkok 230 கிலோமீற்றல் தொலைவில் உள்ள, சீகியோ மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி இன்று புதன்கிழமை காலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. அதிவேக ரயில் பாதை அமைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கிரேன், ஓடும் ரயில்மீது விழுந்துள்ளது. இதனையடுத்து ரயில் தடம் […]

இலங்கை

விமல் வீரவன்சவை கைது செய்ய உத்தரவு!

  • January 14, 2026
  • 0 Comments

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று  பிடியாணை  பிறப்பித்துள்ளது. கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹால் இந்த  பிடியாணை  உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், பிரதிவாதியின் பிணை கையொப்பமிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், அடுத்த திட்டமிடப்பட்ட விசாரணையில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிபதி உத்தரவிட்டார். 75 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாகச் சேர்த்த குற்றச்சாட்டுகளுக்காக அவர் மீது […]

error: Content is protected !!