விமான நிலையத்தில் 03 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 03 கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் சுங்க அதிகாரிகளால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-226 என்ற விமானம் மூலம் சந்தேகநபர் நாட்டை வந்தடைந்துள்ளார். விமான நிலையத்தின் Green Channel ஊடாக வெளியேற முயன்றபோது, சுங்க அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அவர் சோதனையிடப்பட்டார். இதன்போது, சந்தேகநபரின் மூன்று பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த […]













