இலங்கை செய்தி

முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவது எமது கடமை”: வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

  • January 19, 2026
  • 0 Comments

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ள நிலையில், அதற்கான அடிப்படை உட்கட்டுமானங்களை மேம்படுத்தி, முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். நிதி அமைச்சின் கீழான தேசிய திட்டமிடல் திணைக்களம், தேசிய வரவு – செலவுத் திட்டத் திணைக்களம், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் ஆகியவற்றின் பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழான உலக வங்கியின் திட்டங்களுக்கான பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயர்மட்டக் […]

ஐரோப்பா

அமெரிக்காவிற்கு சாதகமான அணுகுமுறை!! திரைமறைவில் நிற்கும் ஸ்டாமர் – சலிப்பில் மக்கள்!

  • January 19, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் கெயர் ஸ்டாமரின் டவுனிங் ஸ்ட்ரீட் ( Downing Street) உரை நாட்டு மக்களை சோர்வடைய செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் பொருளாதார அழுத்தம், மற்றும் நாட்டு மக்களின் வாழ்க்கை செலவு முறை, உள்ளுராட்சி தேர்தல்கள் தொடர்பில் விரிவாக பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கமான அணுகுமுறையை பின்பற்றி சில விடயங்கள் குறித்து மேலோட்டமாக பேசியதாக கூறப்படுகிறது. குறிப்பாக ட்ரம்பின் வரி விதிப்பிற்கு எதிராக காத்திரமான பொருளாதார தடை குறித்து எவ்வித கருத்தையும் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

புத்தர் சிலை விவகாரம் ; தேரர்கள் உள்ளிட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்

  • January 19, 2026
  • 0 Comments

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில், கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நான்கு பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேக நபர்களை இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக, 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதியன்று, முறையான அனுமதி இன்றி […]

செய்தி

காசா அமைதி வாரியத்தில் இணைய புட்டினுக்கு அழைப்பு!

  • January 19, 2026
  • 0 Comments

காசா அமைதி வாரியத்தில் இணைந்துக்கொள்ள ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. “அமைதி வாரியத்தில் சேர புடினுக்கு இராஜதந்திர வழிகள் மூலம் அழைப்பு வந்தது,” என்று ஜனாதிபதியின் நீண்டகால பத்திரிகை செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவ்  (Dmitry Peskov) அறிவித்துள்ளார். “இந்த திட்டத்தின் அனைத்து விவரங்களையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம், அனைத்து நுணுக்கங்களையும் தெளிவுபடுத்த அமெரிக்க தரப்பைத் தொடர்பு கொள்ள விரும்புகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வந்து காசாவை […]

உலகம் செய்தி

நிலவுக்குச் செல்லும் உங்கள் பெயர் ; நாசா வழங்கும் ஒரு அரிய வாய்ப்பு

  • January 19, 2026
  • 0 Comments

நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்டெமிஸ் II (Artemis II) விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாக, உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்களின் பெயர்களை விண்வெளிக்கு அனுப்பும் அரிய வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. “ஆர்ட்டெமிஸ் II உடன் உங்கள் பெயரை அனுப்பவும்.(Send Your Name with Artemis II) ” எனப்படும் இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் நபர்களின் பெயர்கள், நிலாவைச் சுற்றி பயணம் செய்ய உள்ள ஓரியன் (Orion) விண்கலத்தில் இடம்பெறவுள்ளன. ஆர்டெமிஸ் II […]

ஐரோப்பா செய்தி

ட்ரம்பின் சில புவிசார் முயற்சிகளுக்கு பிரித்தானியா ஆதரவு

  • January 19, 2026
  • 0 Comments

வர்த்தகப் போர் எவருடைய நலனுக்கும் உதவாது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். டவுனிங்கில் (Downing) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சில புவிசார் முயற்சிகளை பிரித்தானியா ஆதரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக காசாவில் போர்நிறுத்தத்தை முன்னெடுப்பதற்கு பிரித்தானியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக அமெரிக்கா, உக்ரைன் மற்றும் பிற நட்பு நாடுகளுடன் […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் தெரு விளக்கு கேமராக்களில் சிக்கிய 100-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது

  • January 19, 2026
  • 0 Comments

தெற்கு லண்டனின் குரோய்டன் (Croydon) பகுதியில் நடத்தப்பட்ட நேரடி முக அங்கீகார தொழில்நுட்ப (LFR) சோதனை, கொள்ளை போன்ற குற்றங்களை குறைக்க உதவியுள்ளதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை மூலம் இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஒக்டோபரில் தொடங்கப்பட்ட இந்த முன்னோடித் திட்டத்தில், மொபைல் வேன்களுக்குப் பதிலாக தெரு விளக்கு கம்பங்களில் நிலையான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை பொதுமக்களின் முகங்களை கண்காணிப்பு பட்டியலில் உள்ள குற்றவாளிகளின் முகங்களுடன் ஒப்பிடுகின்றன. கைதானவர்களில் […]

ஐரோப்பா செய்தி

கன்சர்வேடிவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ரோசிண்டெல் – ரிஃபார்ம் யுகேவில் இணைந்தார்

  • January 19, 2026
  • 0 Comments

ரோம்ஃபோர்டு (Romford) தொகுதி எம்.பி.யும் முன்னாள் நிழல் அமைச்சருமான ஆண்ட்ரூ ரோசிண்டெல்(Andrew Rosindell), கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்து சீர்திருத்த UK கட்சியில் இணைந்துள்ளார். கன்சர்வேடிவ் கட்சி (Conservative Party) உறுப்பினர்கள் கடந்த அரசாங்கத்தின் தவறுகளுக்கு பொறுப்பேற்க மறுப்பதாகவும், நாட்டின் சரிவுக்கு காரணமாக உள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு நைகல் ஃபரேஜுடன் (Nigel Farage) கலந்துரையாடியதைத் தொடர்ந்து அந்த கட்சியில் இணைந்ததாக ரோசிண்டெல் (Rosindell) தெரிவித்துள்ளார். அவர் சிறந்த தேசபக்தர் எனவும் தனது கட்சிக்கு […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்த முடிவு டென்மார்க் இராச்சியத்திற்கும் மட்டுமே சொந்தமானது – ஸ்டார்மர்

  • January 19, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தை கைப்பற்றும் தனது திட்டத்தை எதிர்க்கும் பிரித்தானியா மற்றும் பிற நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரிகளை விதிக்கும் திட்டம் “முற்றிலும் தவறானது” என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். டவுனிங்கில் (Downing) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்த முடிவு “கிரீன்லாந்து மக்களுக்கும் டென்மார்க் இராச்சியத்திற்கும் மட்டுமே சொந்தமானது” எனவும் ஸ்டார்மர் கூறுகிறார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “அமெரிக்காவுடன் ஒரு நல்ல […]

உலகம் செய்தி

ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு ; பிரதமர் தகைச்சியின் அதிரடி முடிவு

  • January 19, 2026
  • 0 Comments

ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகைச்சி (Sanae Takaichi), எதிர்வரும் வெள்ளிக்கிழமை அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் பதவியேற்ற அவர், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தனது புதிய திட்டங்களுக்கு மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் இந்த இடைத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 465 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் கீழவைக்கு நடைபெறவுள்ள இந்தத் தேர்தல், தகைச்சியின் தலைமைத்துவத்திற்கு ஒரு முக்கிய சோதனையாகக் கருதப்படுகிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு குறித்த […]

error: Content is protected !!