இலங்கை செய்தி

மாதச் சம்பளம் 6 இலட்சத்திற்கும் அதிகம் ; 25 முதல் 45 வயதுடையவர்களுக்கு அரிய வாய்ப்பு

  • January 20, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டில் 1,000 இலங்கையர்களை வீட்டுத் தாதியர் பணிகளுக்காக இஸ்ரேலுக்கு அனுப்ப இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான தகுதிகளாக, 25 முதல் 45 வயதுக்குட்பட்ட, க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் NVQ III தாதியர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தது 11 மாத கால தாதியர் அனுபவத்தைக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன், ஆங்கில மொழியில் போதிய […]

இலங்கை

நோபல் பரிசு அமெரிக்காவிற்கு இல்லை என்றால் உலக அமைதி பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?

  • January 20, 2026
  • 0 Comments

டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான தனது முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கவுள்ளதாகவும் எச்சரித்துள்ளார். மேலும் இந்த உந்துதலை அமைதிக்கான நோபல் பரிசை வெல்லத் தவறியதோடு தொடர்புபடுத்தி பேசியுள்ளார். நோர்வேயின் பிரதமர் ஜோனாஸ் காஹர் ஸ்டோயருக்கு (Jonas Gahr Stoere) அனுப்பிய குறுஞ்செய்தியில், 08 நாடுகளின் போரை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டாம் என்று முடிவு செய்ததைக் கருத்தில் […]

உலகம் ஐரோப்பா செய்தி

ட்ரம்ப்பின் கருத்தை வரவேற்கும் நைஜல் மற்றும் கெமி ; பிரித்தானிய அரசியலில் சலசலப்பு

  • January 20, 2026
  • 0 Comments

சாகோஸ் (Chagos) தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைக்கும் பிரித்தானியாவின் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “மிகப்பெரிய முட்டாள்தனமான செயல்” என கடுமையாக விமர்சித்துள்ளார். முக்கியமான இராணுவத் தளமான டியாகோ கார்சியாவை எவ்விதத் தேவையுமின்றி கையளிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள ட்ரம்ப், இந்த விவகாரத்தை தான் கிரீன்லாந்தைக் கைப்பற்ற விரும்புவதற்கான நியாயமாக முன்வைத்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகம் முன்னர் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த விமர்சனம் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, கன்சர்வேட்டிவ் […]

உலகம்

சுறாக்களின் செயற்பாடு அதிகரிப்பு – ஆஸ்திரேலியாவில் மூடப்படும் கடற்கரைகள்!

  • January 20, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில்  ஏராளமான கடற்கரைகள் மூடப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 48 மணிநேரத்தில் நான்கு சுறா தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியதை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீரின் தரம், மீன்கள் மற்றும் வேட்டையாடுபவர்களை ஈர்க்கும் கனமழை காரணமாக சுறாக்களின் செயல்பாடு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். காலநிலை சார்ந்த வெப்பமயமாதல் கடலோரப் பகுதிகளில் சுறாக்கள் செலவிடும் நேரத்தை நீட்டிப்பதாகவும், மனிதர்களுடன் சந்திப்புகளுக்கான வாய்ப்பை அதிகரிப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையிலேயே மேற்படி தாக்குதல் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்களின் […]

இந்தியா

இந்திய குடியரசு தின விழா: 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு!

  • January 20, 2026
  • 0 Comments

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்குமாறு 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 77-வது குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. டெல்லி கர்தவ்ய பாதையில் குடியரசு தினவிழா நடைபெறுகின்றது. ராணுவத்தின் வலிமை மற்றும் கலாசார பன்முக தன்மையின் வளமை ஆகியவற்றை பறைசாற்றுவதுடன் இந்நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் உர்சுலா வான்டர் லெயன் ஆகியோர் கலந்து […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் புரோஸ்டேட்  மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளது ; தேசிய சுகாதார சேவை தகவல்

  • January 20, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் புரோஸ்டேட் புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளதாக தேசிய சுகாதார சேவை (NHS) தெரிவித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில் சுமார் 64,425 ஆண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24 சதவீத அதிகரிப்பாகும். தற்போது ஸ்காட்லாந்திலும் இது பொதுவான புற்றுநோயாக மாறியுள்ள நிலையில், வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் மட்டும் ஆண்டுக்கு 12,000-க்கும் அதிகமானோர் புரோஸ்டேட் புற்றுநோயால் உயிரிழப்பதாகத் தரவுகள் எச்சரிக்கின்றன. குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்ட […]

இலங்கை செய்தி

மலையக மக்களுக்காக ஜி.எஸ்.பி. வரி ஆயுதத்தை கையிலெடுங்கள்: பிரான்ஸ் தூதுவரிடம் மனோ கோரிக்கை!

  • January 20, 2026
  • 0 Comments

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லாம்பர்டுக்கும் Remy Lambert , தமிழ் முற்போக்கு கூட்டணியின் Tamil Progressive Alliance (TPA பிரதிநிதிகளுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் Mano Ganesan இல்லத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பின்போது சமகால அரசியல், பொருளாதார விடயங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளன. தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களான பேராசிரியர் விஜயசந்திரன், பாரத் அருள்சாமி, மற்றும் புஷ்பநாதன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். மேற்படி சந்திப்பு தொடர்பில் […]

இலங்கை

வாகன இறக்குமதி – எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக இலாபம் ஈட்டிய அரசாங்கம்!

  • January 20, 2026
  • 0 Comments

நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கம் 441 பில்லியன் ரூபாய் வருமானத்தை எதிர்பார்த்ததாகவும், ஆனால் 904 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியதாகவும் பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சர் நிஷாந்த ஜெயவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று சுங்கத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை 90 நாட்களுக்குள் விடுவிக்க 3% வரி சேர்க்கப்படும். மேலும் இது 5 மாத காலத்திற்குள் சுமார் 45% ஆக அதிகரிக்கும், இதனால் நுகர்வோர் அந்த கூடுதல் தொகையை ஏற்க வேண்டியிருப்பதாக  ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார். […]

இலங்கை செய்தி

இந்து சமுத்திர கடலோர அரசுகளின் கூட்டணியை உருவாக்க திட்டம்: இலங்கை ஒப்புதல்!

  • January 20, 2026
  • 0 Comments

இந்து சமுத்திர கடலோர அரசுகளின் கூட்டணியை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்குரிய யோசனையை கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேர் அமைச்சரவையில் முன்வைத்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்றது. இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர் , அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு, “ சூரை மீன் Tuna fish மீன்பிடித் […]

உலகம் ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் புதிய நெருக்கடி

  • January 20, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராகப் புதிய பொருளாதாரப் போரை அறிவித்துள்ளார். காசா போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கும் தனது ‘அமைதிச் சபையில்’ (Board of Peace) இணைய மறுத்ததற்காக, பிரெஞ்சு மதுபானங்கள் மற்றும் ஷாம்பெயின் (wines and champagne) மீது 200 சதவீத வரி விதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் விரைவில் பதவியில் இருந்து விலகப்போகிறார் என விமர்சித்த ட்ரம்ப், இந்த வரி விதிப்பின் […]

error: Content is protected !!