ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவால் 50 விமானங்கள் ரத்து
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, ஸ்ரீநகர் பன்னாட்டு விமான நிலையத்தின் போக்குவரத்து இன்று முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை மற்றும் ஓடுபாதையில் பனி குவிந்துள்ளதால், இன்று இயக்கப்பட வேண்டிய 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் வருகை தர வேண்டிய 25 விமானங்களும், புறப்பட வேண்டிய 25 விமானங்களும் அடங்கும். இதனால், குடியரசு தின விடுமுறையைக் கொண்டாடச் சென்றிருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வீடு திரும்ப முடியாமல் விமான […]













