இலங்கை செய்தி

40 வருடங்களாக காடாக இருந்த மாங்காடு விதானையார் வீதி மீண்டும் திறப்பு – விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி

  • January 27, 2026
  • 0 Comments

40 வருடங்களாக காடாக இருந்த மாங்காடு விதானையார் வீதி, தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜின் நேரடித்தலையீட்டில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மாங்காடு விதானையார் வீதி கடந்த 40 வருடங்களாக கவனிப்பார் அற்ற நிலையில் பற்றைக்காடாக காணப்பட்டது. இதனால் இந்த பிரதேசத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் பல சவால்களை எதிர்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜிடம் […]

இலங்கை செய்தி

கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

  • January 27, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டார். கடந்த இரு நாட்களாக வடக்குக்குக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அதன் பின்னர் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பதிவாளர், நிதியாளர், நூலகர் மற்றும் அரசறிவியல், பொருளியல் மற்றும் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறைகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்புகளின் போது, அரசியல் பொருளாதார நிலைமைகள் […]

இலங்கை செய்தி

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு

  • January 27, 2026
  • 0 Comments

கடந்த வருடம் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ​​2026 ஆம் ஆண்டு ஜனவரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி மாதத்தில் மொத்தம் 4,970 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்தார். இருப்பினும், இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 6,521 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் அவர் கூறினார். கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் […]

ஐரோப்பா செய்தி

நில வாடகைக்கு முற்றுப்புள்ளி” ; இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆண்டுக்கு 250 பவுண்டுகள் உச்சவரம்பு அமல்

  • January 27, 2026
  • 0 Comments

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குத்தகை வீடுகளுக்காக செலுத்தப்படும் நில வாடகைக்கு உச்சவரம்பு ஒன்றை அரசாங்கம் அறிவிக்கவுள்ளது. தொழிற்கட்சியின் 2024 தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில், கட்டுப்பாடற்ற நில வாடகை வசூல்களை ஒழுங்குபடுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. உச்சவரம்பு எவ்வளவு என இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், அது ஆண்டுக்கு சுமார் 250 பவுண்டுகளாக இருக்கலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த முடிவு ஓய்வூதிய நிதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலைகளும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசு தனது […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

சந்திரா புயல் : பிரித்தானியாவில் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடல்!

  • January 27, 2026
  • 0 Comments

பிரித்தானியாவை நெருங்கி வரும் சந்திரா (Chandra) புயல் காரணமாக நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு அயர்லாந்தில் கிட்டத்தட்ட 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் நாளைய தினம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் M48 செவர்ன் (M48 Severn) பாலம் மூடப்பட்டுள்ளதுடன், பலத்த காற்று காரணமாக ஹம்பர் (Humber) பாலத்தின்  உயர் பக்கத்தில்  வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சுமார் 10,000 சொத்துக்கள் தற்போது மின்சாரம் இல்லாமல் இருப்பதாகவும், அதிகாலை முதல் […]

உலகம்

17 ஆண்டுகளில் இல்லாத கடுமையான வெப்பநிலையை அனுபவிக்கும் ஆஸ்திரேலியா!

  • January 27, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கடுமையான வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறிப்பாக மெல்பேர்ன் நகரில் 17  ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பமான வானிலை பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் பதிவான வெப்ப அலை காட்டுத்தீ அபாயத்தை அதிகரித்துள்ளது. இதனால் கிராமப்புறங்களில் நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவின் தலைநகரான மெல்பேர்னின் சில பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை (113 டிகிரி […]

ஆஸ்திரேலியா செய்தி

ட்ரம்ப் ஒரு முரடர்; சலுகை எதிர்பார்க்காதீர்கள்” ; அல்பானிஸை எச்சரிக்கும் மால்கம்

  • January 27, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கீழ் உலகளாவிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் சிதைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா இனியும் மௌனம் காக்கக் கூடாது என முன்னாள் பிரதமர் மால்கம் டர்ன்புல் வலியுறுத்தியுள்ளார். கனடா பிரதமர் மார்க் கார்னி அண்மையில் டாவோஸ் நகரில் ஆற்றிய உரையை முன்னுதாரணமாகக் கொண்டு பிரதமர் அல்பானிஸ் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ட்ரம்ப்பை ஒரு “முரடர்” (Bully) என வர்ணித்த டர்ன்புல், அவர் மிரட்டல்களுக்குப் பணியாமல் பதிலடி கொடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவார் […]

அரசியல் இலங்கை செய்தி

சிங்கப்பூரின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருடன் சஜித் சந்திப்பு!

  • January 27, 2026
  • 0 Comments

சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa அந்நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருடன் George Yeo Yong-Boon பேச்சு நடத்தியுள்ளார். ஆளுகை, பொருளாதார மாற்றம் மற்றும் பொதுக் கொள்கை மறுசீரமைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல்களை நடந்தும் நோக்கிலேயே சஜித் சிங்கப்பூருக்கு ஆய்வுச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூரில் அமைந்துள்ள லீ குவான் யூ பொதுக் கொள்கைகள் கற்கைகள் நிறுவகத்திலேயே Lee Kuan Yew School of Public Policy – LKYSPP, சிங்கப்பூரின் முன்னாள் […]

ஐரோப்பா செய்தி

ஸ்காட்லாந்து – பிரான்ஸ் இடையே நேரடி கப்பல் சேவை ஆரம்பம்

  • January 27, 2026
  • 0 Comments

ஸ்காட்லாந்தின் ரோசைத் (Rosyth) மற்றும் பிரான்சின் டன்கிர்க் (Dunkirk) துறைமுகங்களுக்கு இடையே நேரடி சரக்கு மற்றும் பயணிகள் படகு போக்குவரத்து சேவை இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படவுள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பாவிற்கு நேரடிப் போக்குவரத்துத் தொடங்குவது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. டேனிஷ் நிறுவனமான DFDS (டேனிஷ் சர்வதேச கப்பல் மற்றும் தளவாட நிறுவனம்) இயக்கவுள்ள இந்த 20 மணிநேரப் பயணச் சேவையானது, ஸ்காட்லாந்து பொருளாதாரத்திற்கு சுமார் 11.5 மில்லியன் பவுண்டுகள் வருமானத்தை ஈட்டித் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

கமல்ஹாசன்- இலங்கை துணை தூதுவர் சந்திப்பு: இரு தரப்பு உறவு குறித்தும் ஆராய்வு!

  • January 27, 2026
  • 0 Comments

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான நடிகர் கமல்ஹாசனை, தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கணேசநாதன் கீதீஸ்வரன் மரியாதைப் நிமித்தம் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பில், துணைத் தூதரின் மனைவி கிருத்திகா தேவி மற்றும் தூதரக அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்தியா–இலங்கை இடையிலான வலுவான மற்றும் நீடித்த இருதரப்பு உறவை இந்தச் சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது என மக்கள் நீதி மய்யம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. […]

error: Content is protected !!