Learn about Radikaa's dramatic transformation in ‘தாய்கிழவி’ through groundbreaking prosthetic makeup techniques and artistry! பொழுதுபோக்கு

பிம்பத்தை உடைத்த ‘குயின்’: ராதிகாவின் மிரட்டலான ‘தாய்கிழவி’ அவதாரம்!

  • January 29, 2026
  • 0 Comments

அடையாளத்தை அழித்து உருவான ‘தாய்கிழவி’: ராதிகாவின் பிரமிக்க வைக்கும் உருவமாற்றமும்! தொழில்நுட்ப ரகசியங்களும்! திரையுலகில் பல தசாப்தங்களாகத் தனது ஆளுமையைச் செலுத்தி வரும் ‘குயின்’ ராதிகா சரத்குமார், அண்மையில் ஒரு கிராமத்து ஏழைப் பாட்டியாக உருமாறிய விதம் ஒட்டுமொத்தத் திரையுலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு முன்னணி நடிகை, தனது பிம்பத்தைச் சற்றும் யோசிக்காமல் ஒரு கதாபாத்திரத்திற்காகத் தன்னை உருமாற்றிக் கொண்டது ஒரு ‘கலை பொக்கிஷம்’.   இந்த உருமாற்றத்தின் பின்னால் இருந்த தொழில்நுட்பமும் உழைப்பும் அளப்பரியது. வெறும் […]

இந்தியா செய்தி

நொய்டாவில் விஷம் குடித்து பெற்றோர் மரணம் – 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

  • January 29, 2026
  • 0 Comments

நொய்டாவில்(Noida) ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பம் விஷம் குடித்ததில் தாய் மற்றும் தந்தை உயிரிழந்துள்ளதாகவும் அவர்களது மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் ஷ்ரவன் மற்றும் அவரது மனைவி நீலம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, குடும்பப் பிரச்சினைகள் காரணமாக இந்த தம்பதியினர் குழந்தைகைளுடன் விஷம் குடித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தம்பதியினரின் 10, 8 மற்றும் 4 வயதுடைய மூன்று குழந்தைகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலை சீராக […]

இலங்கை செய்தி

இலங்கையில் பேராபத்தாக மாறிய புற்றுநோய்-  நாளொன்றுக்கு 40  பேர் உயிரிழப்பு

  • January 29, 2026
  • 0 Comments

இலங்கை தற்போது ஒரு அமைதியான புற்றுநோய் தொற்றை எதிர்கொண்டு வருகிறது. தினமும் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளர்கள் கண்டறியப்படுவதுடன், சுமார் 40 பேர் உயிரிழப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தலைவர் டொக்டர் ஹசரேலி பெர்னாண்டோ, இந்த அதிகரிப்புக்கு புகையிலை பயன்பாடு, மதுபானம், டீசல் புகை, பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் எரித்தல், தொழிற்சாலை வாயுக்கள் மற்றும் சிவப்பு இறைச்சி உணவு பழக்கம் போன்றவை முக்கிய காரணங்கள் என கூறினார். குறிப்பாக ஆண்களில் வாய்ப்புற்றுநோய் […]

உலகம் செய்தி

சீனாவில் பண மோசடியில் ஈடுபட்ட 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

  • January 29, 2026
  • 0 Comments

மியான்மரில்(Myanmar) மோசடி மையங்களை நடத்திய 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின்(China) கிழக்கு ஜெஜியாங்(Zhejiang) மாகாணத்தில் உள்ள வென்சோவில்(Wenzhou) உள்ள ஒரு நீதிமன்றத்தால் 11 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. வடக்கு மியான்மரின் நான்கு குடும்பங்களை உள்ளடக்கிய மிங்(Ming) குடும்பம், இணைய மோசடி, விபச்சாரம் மற்றும் போதைப்பொருள் உற்பத்திகளை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டனர். இந்நிலையில், தூக்கிலிடப்பட்டவர்களின் குற்றங்களில் வேண்டுமென்றே கொலை செய்தல், […]

ஐரோப்பா

UKவில் மருத்துவர் ஒருவரின் மோசமான செயல் – 100 குழந்தைகள் பாதிப்பு!

  • January 29, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் (Great Ormond Street) மருத்துவமனையில் மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர் ஒருவரால் ஏறக்குறைய 100 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பாய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. யாசர் ஜப்பார் (Yaser Jabbar) என்ற மருத்துவர் மீதே மேற்படி குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற லண்டன் மருத்துவமனையால் வெளியிடப்பட்ட விசாரணையில், அவர் மேற்கொண்ட அறுவை சிகிச்சைகளில் நடைமுறைக்கு ஏற்றுக்கொள்ள முடியாத பல சிகிச்சைகள் இடம்பெற்றுள்ளதாகவும், இதற்கு பரவலான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஜப்பார் 2017 மற்றும் […]

செய்தி விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

  • January 29, 2026
  • 0 Comments

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல ஆஸ்திரேலியா அணி டி20 தொடரில் விளையாடுகிறது. அந்தவகையில், இன்று லாகூரில்(Lahore) முதலாவது டி20 போட்டி ஆரம்பமானது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 8 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில், சைம் ஆயுப்(Saim Ayub) 40 ஓட்டங்களும் சல்மான் அகா(Salman Agha) 39 ஓட்டங்களும் பெற்றனர். இந்நிலையில், […]

உலகம்

நைஜீரியாவின் நியாமி விமான நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு – 01 மணிநேரம் நீடித்த தாக்குதல்!

  • January 29, 2026
  • 0 Comments

நைஜீரியாவின் நியாமியில் (Niamey) உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் நேற்று துப்பாக்கிச் சூடு மற்றும் பலத்த வெடிச்சத்தங்கள் ஏற்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதாகவும், உடனடியாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தில் ஏற்றுமதிக்காக   சுமார் 1,000 மெட்ரிக் டன் யுரேனியம் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்  இந்த […]

இலங்கை செய்தி

இலங்கையில் நிபா வைரஸ் பரவும் அபாயம் அதிகம் ? – சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு

  • January 29, 2026
  • 0 Comments

இலங்கைக்குள் நிபா வைரஸ் பரவும் அபாயம் தற்போது மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகச் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். நிபா வைரஸ் தொடர்பில் தெளிவுபடுத்தி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மைக் காலத்தில் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்றுடைய சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு உலக சுகாதார ஸ்தாபனம் […]

இலங்கை செய்தி

சுதந்திர தின விழாவுக்கு ரூ. 100 மில்லியன் ஒதுக்கீடு!

  • January 29, 2026
  • 0 Comments

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. சுதந்திர தின விழா “இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” எனும் கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி தலைமையில் நிகழ்வு நடைபெறும். இதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்றது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சிதுறை அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோர் ஊடக சந்திப்பில் […]

உலகம் செய்தி

ஈரானில் அதிகரித்து வரும் நெருக்கடி – மத்திய கிழக்கு நாடுகளுக்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப்’!

  • January 29, 2026
  • 0 Comments

ஈரானில் அதிகரித்து வரும் நெருக்கடி குறித்து விவாதிக்க இஸ்ரேலிய மற்றும் சவுதி பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இன்று அழைப்பு விடுத்துள்ளார். தெஹ்ரானுடனான பதட்டங்களைத் தணிக்கும் முயற்சியில் சவுதி அரேபியாவின் தூதுக்குழுவொன்று அமெரிக்காவிற்கு தகவல்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து ட்ரம்ப் மேற்படி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையே ஈரானுக்குள் இருக்கும் சாத்தியமான இலக்குகள் குறித்த உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்ள இஸ்ரேலிய அதிகாரிகள் வொஷிங்டன் டிசியில் உள்ளனர். அமெரிக்காவின் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் முழு அளவிலான போராக […]

error: Content is protected !!