உலகம் செய்தி

பலஸ்தீனியர்கள் சங்கிலியில் கட்டி நாடுகடத்தப்படுகிறார்களா?

  • February 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் இருந்து பலஸ்தீனியர்களை நாடுகடத்தும் விமானங்கள், அயர்லாந்தின் கிளேர் கவுண்டியில் (County Clare) உள்ள ஷானன் விமான நிலையம் (Shannon Airport) வழியாக சென்றது குறித்து அந்நாட்டு அரசியல்வாதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என்று அவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) க்கு நன்கொடையளித்த தொழிலதிபர் கில் டெசர் (Gil Dezer) க்கு சொந்தமான தனியார் ஜெட் விமானம், அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்கத் துறை ICE […]

பொழுதுபோக்கு

புது வாழ்க்கையை தொடங்கிய சரண்யா பொன்வண்ணனின் மகள் – பிரபலங்கள் பலரும் வாழ்த்து

  • February 7, 2026
  • 0 Comments

நடிகை சரண்யா பொன்வண்ணனின் இளைய மகள் சாந்தினிக்கு ஒக்டோபர் மாதம் டானி பிலிப் பாபு என்பவருடன் ஊட்டியில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து 02 ஆம் திகதி கோபிசெட்டிபாளையத்திலுள்ள ஒரு தேவாலயத்தில் எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. ‘இதனையடுத்து, நேற்று சென்னை கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது துணைவியாருடன் கலந்து கொண்டார். மேலும், நடிகர் சூர்யா, கார்த்தி, சசிகுமார், தனுஷ், சசிகுமார், […]

இந்தியா தமிழ்நாடு

தேர்தல் வந்தால்தான் தமிழகம் நினைவுக்கு வரும் – இனி பிரதமர் திருக்குறள் சொல்வார்

  • February 7, 2026
  • 0 Comments

கட்டுப்பாடில்லாமல் வெற்றுக் கூச்சல் போடுகிற கூட்டத்தால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பலனும் இல்லை” என தமிழக வெற்றிக்கழகத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு விருதுநகரில் இன்று நடைபெற்ற நிலையில் இங்கு கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த உதயநிதி, “எடப்பாடி பழனிசாமிதான் இந்தியாவிலேயே மிகப் பெரிய முரட்டு அடிமை” கொள்கை, இலட்சியம் என்றால் என்னவென்றே தெரியாமல், கட்டுப்பாடு இல்லாமல் வெற்றுக் கூச்சல் […]

அரசியல் இலங்கை செய்தி

எம்.பிக்களின் ஓய்வூதியம் ரத்து: 17 ஆம் திகதி சபையில் விவாதம்!

  • February 7, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி முழு நாள் விவாதம் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கூட்டத்திலேயே மேறபடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல எனவும், சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றலாம் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் மேற்படி தீர்ப்பை சபாநாயகர் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்நிலையிலேயே மேற்படி சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் 17 […]

செய்தி

“வடக்கு, கிழக்கில் முகாம்கள் இருப்பதே தமிழர்களுக்கு பாதுகாப்பு” – மஹிந்த அணி கண்டுபிடிப்பு!

  • February 7, 2026
  • 0 Comments

” வடக்கு, கிழக்கில் படை முகாம்கள் இருப்பதாலேயே தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார Shantha Bandara தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “சுதந்திரம் என்பது அபிமானம். அதன் கம்பீரத்தன்மையைக் குறை மதிப்புக்கு உட்படுத்தக்கூடாது. உலகில் எந்தவொரு நாடும் அவ்வாறு செய்யாது. ஆனால் இலங்கையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் சுதந்திரத்தினத்தின் கம்பீரத்தன்மை இல்லாமல் போயுள்ளது. செலவுகளை […]

இந்தியா செய்தி

உலகுக்கான இந்தியாவின் கொடையே தமிழ் மொழி – மலேசியாவில் மோடி பெருமிதம்

  • February 7, 2026
  • 0 Comments

உலகுக்கான இந்தியாவின் கொடை தமிழ் மொழி என்றும் தமிழ் இலக்கியம் நித்தியமானது என்றும் தமிழ் பண்பாடு உலகளாவியது என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்புக்கமைய இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக பிரதமர் நரேந்திர மோடி மலேசியா சென்றுள்ளார். இந்நிலையில் தலைநகர் கோலாலம்பூரில் பிரதமர் மோடியை அன்வர் இப்ராஹிம் வரவேற்றார். இந்திய வம்சாவளியினர் பெருமளவில் பங்கேற்ற சமூக நிகழ்ச்சியில் உரையாற்றிய அன்வர் இப்ராஹிம், ‘‘உங்கள் போராட்டத்தை நான் பின்தொடர்ந்து வருகிறேன். […]

ஐரோப்பா செய்தி

உக்ரைன்–ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய அமெரிக்கா அழுத்தம்

  • February 7, 2026
  • 0 Comments

ரஷ்யாவுடனான போரை ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய அமெரிக்கா விரும்புவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இரு தரப்பும் அடுத்த வாரம் அமெரிக்காவின் மியாமியில், பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உக்ரைன் மற்றும் ரஷ்யா குழுக்கள் அமெரிக்காவில் சந்திக்க வேண்டும் என அமெரிக்கா முதன் முறையாக முன்மொழிந்தது. எங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தி விட்டோம். தற்போது வொஷிங்டன் அல்லது மாஸ்கோவிலிருந்து உடனடி கருத்து இல்லை, ஆனால் அமெரிக்க ஜனாதிபதி […]

இலங்கை செய்தி

வாய்வெடி உட்கொண்ட யானை உயிரிழப்பு: விசாரணை தீவிரம்!!

  • February 7, 2026
  • 0 Comments

திருகோணமலை மொரவெவ- அவ்வைநகர் Morawewa-Avvainaga பகுதியில் வாய்வெடி உட்கொண்ட நிலையில் யானையொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. யானையின் வாய் வீக்கமாக காணப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. குறித்த யானை மரணித்தமை தொடர்பில் கிரிதல வனவிலங்கு திணைக்கள வைத்தியர் கலிங்கு ஆராய்ச்சி விசாரணையை முன்னெடுத்தார், வாய் வெடி உட்கொண்டமையினாலேயே குறித்த யானை உயிரிழந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இருந்த போதிலும் மொரவெவ பிரதேசத்தில் கடந்த வருடத்தில் மாத்திரம் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் […]

இலங்கை செய்தி

கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட 21 வயது இளைஞன் – அறுவர் கைது

  • February 7, 2026
  • 0 Comments

ரத்மலானை, தர்மாராம வீதிப் பகுதியில் ரயில் வீதிக்கு அருகில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞர் கிரிக்கெட் மட்டை மற்றும் விக்கெட் தடிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட அறுவர் கல்கிஸ்ஸ பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்மலானை, ஸ்ரீ தர்மாராம வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே […]

இலங்கை செய்தி

4 நாட்களுக்குள் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!

  • February 7, 2026
  • 0 Comments

இலங்கைக்கு கடந்த 04  நாட்களுள் மாத்திரம் 40 ஆயிரத்து 54 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். பெப்ரவரி 1 முதல் 04 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 5 ஆயிரத்து 287 பேரும், பிரிட்டனில் இருந்து 5ஆயிரத்து 184 பேரும், ரஷ்யாவில் இருந்து3 ஆயிரத்து 817 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். இலங்கையின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை […]

error: Content is protected !!