இலங்கை

போதைப் பொருள் பாவித்து பேருந்தை செலுத்திய இ.போ.ச சாரதி கைது!

  • February 15, 2026
  • 0 Comments

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியொருவர் போதைப் பொருள் பாவித்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி பயணிகளை ஏற்ற வந்த பேருந்தின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் திருகோணமலை மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் போக்குவரத்து சபையில் கடமையாற்றி வரும் வவுனியா -ஈரப்பெரிய குளம்,வெஹரகம பகுதியில் வசித்து வரும் 39 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து […]

இலங்கை செய்தி

மொட்டுக் கட்சயிலிருந்து விலகி சர்வஜன அதிகாரத்திற்கு தாவிய தேரர்

  • February 14, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் செயற்பாடுகள் காரணமாக, அக்கட்சியின் கலென்பிந்துனுவெவ பிரதேச சபை உறுப்பினராகப் பணியாற்றிய அநுராதபுர சோமரதன தேரர் அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அத்துடன் அவர் சர்வஜன அதிகாரம் கட்சியின் மிஹிந்தலை தொகுதி அமைப்பாளர் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார். திஸ்ஸகுட்டி ஆராச்சி அநுராதபுர மக்கள் தொடர்பில் வெளியிடும் சில கருத்துக்களும் அவரது செயற்பாடுகளுமே தாம் கட்சியிலிருந்து விலகக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நிலை தொடர்ந்தால், அநுராதபுர மாவட்டத்தில் பொதுஜன […]

உலகம்

ஐரோப்பா – அமெரிக்க உறவில் ஏற்பட்ட விரிசல் : மார்கோ ரூபியோ கருத்து!

  • February 14, 2026
  • 0 Comments

சமீபகாலமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கான உறவில் சில சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ (Marco Rubio) இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர், கடந்த கால மேற்கத்திய தவறுகளை விமர்சித்தார். “விதிகள் சார்ந்த உலகளாவிய ஒழுங்கை மாயை என விமர்சித்த அவர், உலகளாவிய விடயங்களை அணுகுவதில் ஐ.நா தோல்வியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். ஐரோப்பிய நட்பு நாடுகளிடமிருந்து அமெரிக்கா தீவிரத்தன்மை மற்றும் பரஸ்பரத்தை எதிர்பார்க்கிறது என்றும் அவர் இதன்போது […]

இலங்கை செய்தி

கொழும்பு – ஜிந்துப்பிட்டியிலும் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

  • February 14, 2026
  • 0 Comments

கொழும்பு – ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த நால்வர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தி

ரஷ்ய அச்சுறுத்தல் – போராட தயாராகுங்கள் : ஸ்டாமர் அழைப்பு!

  • February 14, 2026
  • 0 Comments

ரஷ்யாவிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதால், ஐரோப்பா மோதலைத் தேடாவிட்டாலும், போராடத் தயாராக இருக்க வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ( Keir Starmer) தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கான அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகும் ரஷ்யாவின் மறுசீரமைப்பு துரிதப்படுத்தப்படும் என்றும், முழுமையான மற்றும் வலுவான பதில் தேவைப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இன்று இடம்பெற்ற முனிச் பாதுகாப்பு மாநாட்டில் தலைவர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஆக்கிரமிப்பைத் தடுக்கவும், தேவைப்பட்டால் போராடத் தயாராகவும் இருக்க, […]

இலங்கை செய்தி

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு

  • February 14, 2026
  • 0 Comments

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அடையாளந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (14) இரவு 7.50 அளவில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளந் தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 32 வயதுடைய நபர் ஒருவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை செய்தி

சாதாரண தரப் பரீட்சை நிலையங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

  • February 14, 2026
  • 0 Comments

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள நிலையங்களைச் சுற்றி விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பரீட்சை நிலைய வளாகங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை இனங்கண்டு அவற்றை அழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதற்காகப் புகை விசிறும் (Fogging) நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. பரீட்சை காலப்பகுதியில் மாணவர்கள் எவ்வித இடையூறுமின்றித் […]

இலங்கை

இலங்கை மத்திய வங்கியின் தங்க இருப்பு அதிகரிப்பு!

  • February 14, 2026
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கியின் தங்க இருப்புக்கள் 2025 டிசம்பரில் 86 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்த நிலையில், இவ்வாண்டின் முதல் இரு மாதங்களில் 109 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது   21.1.6%   வளர்ச்சியை குறிக்கிறது. கடந்த மாதத்தில் உலகளாவிய தங்க விலையில் ஏற்பட்ட விரைவான அதிகரிப்புடன் மத்திய வங்கியின் தங்க இருப்புக்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ கையிருப்பு இருப்பு சொத்துக்கள் […]

இலங்கை செய்தி

புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிராக கையெழுத்து வேட்டை!

  • February 14, 2026
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு என்பவற்றை முற்றாக நிராகரிக்கும் கையெழுத்துப் போரட்டம் ஆரம்பமாகியுள்ளது. திருகோணமலையில் இன்று (14) சனிக்கிழமை இடம்பெற்ற ஈழத் தமிழர் உரிமைகள் தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வின்போதே கையெழுத்து வேட்டை ஆரம்பமானது. திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், மட்டக்களப்பு அமெரிக்கன் மிசன் அருட்பணி லுக் ஜோன் ஆகியோர் முதலில் கையொப்பம் இட்டனர். அதன்பின்னர் நிகழ்வில் பங்கேற்ற ஏனையோர் கையெழுத்திட்டனர். […]

இலங்கை செய்தி

மன்னாரில் 50 கிலோ கிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்

  • February 14, 2026
  • 0 Comments

மன்னார் கடல் பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது 50 கிலோ கிராமுக்கும் அதிகமான ‘ஹஷிஷ்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகொன்றை சோதனையிட்ட போதே இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!