மாறியது வரலாறு: தோட்டத் தொழிலாளர்களை நேரில் சென்று சந்தித்தார் ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மலையக பெருந்தோட்டப் பகுதிக்குச் சென்று, தொழிலாளர்களுடன் கலந்துரையாடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தது.
தமக்குரிய சம்பள உயர்வு நேற்று கிடைக்கப்பெற்றதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையிலேயே அவர்களை ஜனாதிபதி இன்று நேரில் சந்தித்தார்.
முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நுவரெலியா சென்றார்.
அங்கு செல்லும் வழியிலேயே தொழிலாளர்களைச் சந்தித்து, சிநேகர்பூர்வமாக கலந்துரையாடினார்.
தமக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்த ஜனாதிபதிக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.
தோட்டத் தொழிலாளர்களை, தேயிலை மலைக்கே சென்று ஜனாதிபதி சந்தித்ததை பலரும் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.






