வெற்றிகரமாக முடிந்த அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உயர்நிலைச் சந்திப்பு

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் உயர்நிலைச் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு ஆக்ககரமான ஒன்றாக அமைந்துள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
2018ஆம் ஆண்டு ஜனாதிபதி டிரம்ப், ஈரானுடனான அணுவாயுதத் திட்டத்திலிருந்து விலகினார்.
அந்தத் திட்டம் குறித்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஓமான் தலைநகர் மஸ்கட்டில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.
புதிய உடன்பாட்டுக்கான உத்தேச அடிப்படைத் தகவல்கள் குறித்து அடுத்த வாரம் சனிக்கிழமை மீண்டும் கலந்துரையாடல்கள் தொடரவுள்ளன.
நேற்றைய சந்திப்பு இருதரப்புக்கும் பயனளிக்கும் வழிகளைச் சாதிப்பதற்கான முதல் படி என வெள்ளை மாளிகை பாராட்டியது.
தெஹ்ரானும் அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்பு ஆக்ககரமாக அமைந்தது என்றது. நியாயமான, ஏற்புடைய உடன்பாட்டை எட்டுவதையும் அது வலியுறுத்தியது.
சந்திப்பு அமைதியான, மரியாதையான முறையில் நடைபெற்றதாய் அதிகாரிகள் கூறினர். பேச்சை முன்னெடுத்துச் செல்வதற்கான கடப்பாட்டை இருதரப்பும் காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.