ஆசியா செய்தி

கொரிய தீபகற்பத்திலும் சீனாவிலும் கடும் பனிப்பொழிவு – மில்லியன்கணக்கான மக்கள் பாதிப்பு

கொரிய தீபகற்பத்திலும் சீனாவிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுடன், மில்லியன்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் ஜேஜு தீவில் 120 சென்ட்டிமீட்டர் உயரத்துக்குப் பனி பொழிந்தது. தலைநகர் சோலும் சுங்ஜு நகரமும் கடும் அவதிக்கு உள்ளாயின.

அதிகாரிகள் கடும் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் சாலைகளில் கவனமாகச் செல்லுமாறு வாகனமோட்டிகளுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

நாடு முழுதும் 100க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் தாமதமாயின. வட கொரியாவின் சில பகுதிகளிலும் பனி விடாது கொட்டுகிறது.

தென் ஹம்யோங் பகுதியில் 54 சென்ட்டிமீட்டர் உயரத்துக்குப் பனி படர்ந்துள்ளது. கிழக்குக் கடலோரப் பகுதியில் பனி பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சீனாவின் வடக்கிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.லியாவ்னிங் பகுதியில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

சீனப் புத்தாண்டுக்காகக் குடும்பத்தினரைச் சந்திக்க ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதால் ஊழியர்கள் சாலைகளைச் சுத்தம் செய்துவருகின்றனர்.

(Visited 50 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி