உலகம்

இந்தோனேசியாவில் கடும் மழை – 10 பேர் பலி, அவசர தங்குமிடங்கள் அமைப்பு!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஏறக்குறைய 10 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆறு பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மண்டேலிங் நடால் (Mandailing Natal) பகுதியில் பாலம் இடிந்து விழுந்ததில் 470 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், நியாஸ் தீவில் ( Nias island) நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அவசரகால தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!