பொழுதுபோக்கு

லீக்கானது “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் கதை…

அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இப்படத்திலும் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளனர்.

மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து இம்மாதம் இறுதியில் இப்படத்தின் டிரைலர் வெளிவரவுள்ளது. மேலும் இப்படத்தின் முதல் பாடல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என கூறுகின்றனர்.

இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

“ஒரு அச்சமற்ற டான், தனது குடும்பத்துடன் சமூகத்தில் நிம்மதியாக வாழ தனது இரக்கமற்ற வழிகளையும் வன்முறை வாழ்க்கையையும் மாற்ற முயற்சிக்கிறார். இருப்பினும், அவரது இருண்ட கடந்த காலமும் மிருகத்தனமான செயல்களும் அவரை பின்தொடர்கின்றன. அவர் அவற்றை நேருக்கு நேர் சந்தித்து அவற்றை எதிர்கொள்கிறார். இதன்பின் என்ன நடக்கிறது” என்பது தான் குட் பேட் அக்லி திரைப்படத்தின் கதை என கூறுகிறார்கள்.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்