பொழுதுபோக்கு

இலங்கையில் அதகலம் பண்ணும் கோட் படக்குழுவினர்…

நடிகர் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங்கில் தன்னுடைய போர்ஷன்களை நிறைவு செய்துள்ளார்.

இத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள சூழலில் முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் வரும் 22ம் தேதி விஜய் பிறந்தநாளை ஒட்டி படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் ஆகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கோட் படக்குழுவினர் இலங்கையில் அடுத்த கட்ட சூட்டிங்கில் உள்ளனர். ஆனால் இந்த சூட்டிங்கில் விஜய் பங்கேற்கவில்லை. இலங்கை ஹார்பரில் ஆக்ஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக போகம்பரா சிறைச்சாலையில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் அடுத்தடுத்த பகுதிகளில் இன்னும் ஏழு நாட்கள் கோட் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடத்தப்பட உள்ளதாகவும் அத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(Visited 6 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content