இந்தியா

கோவையில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்! . இரு இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்.

கோவையில் இரு இளைஞர்களை 6 இளைஞர்கள் அரிவாளால் கடுமையாக தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (23). இவரது நண்பர் நிதிஷ்குமார் (21). இவர் மீது பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை வழக்கு பதிவாகியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணையானது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் இன்று ரஞ்சித் கோவை நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து ரஞ்சித் தனது நண்பர்கள் நிதிஷ் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் ராம் நகர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கோவிலம்பாளையம் பகுதியை சேர்ந்த ரவி, கிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் இரு பைக்குகளில் ரஞ்சித் சென்ற வாகனத்தை பின் தொடர்ந்தது. அப்போது ஒரு கட்டத்தில் பைக்கை மடக்கி ரஞ்சித் மற்றும் அவரது நண்பர் நிதிஷ் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த ரஞ்சித்தையும் நிதிஷையும் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டினர். இந்த தாக்குதலில் ரஞ்சித் பலத்த காயமடைந்தார்.

அது போல் நிதிஷ் லேசான காயமடைந்தார். இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவம் நடந்த போது தப்பியோடிய ரஞ்சித்தின் நண்பர் கார்த்திக்கிற்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த காட்டூர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இரு தரப்பும் முன் பகை காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என தெரிகிறது.

இந்த நிலையில் ரஞ்சித், நிதிஷ் மீது 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியானது. அந்த வீடியோவில் தாக்குதல் நடந்த பகுதியில் பொதுமக்கள நடமாட்டம் இருக்கிறது. அப்போதுதான் இந்த மர்மகும்பல் ரஞ்சித்தையும் நிதிஷையும் வாகனத்தில் இருந்து கீழே விழ வைத்து தாக்குதல் நடத்தியது.

அந்த கும்பலில் இருந்து தப்பியோடிய ரஞ்சித் அல்லது நிதிஷில் ஒருவர் கார் பின்பு மறைகிறார். அப்போது அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் அரிவாளுடன் காரின் பின்புறத்தில் உள்ள மரத்தில் ஒளிகிறார்.

இதையடுத்து காரின் பின்புறம் மறைந்த நபர் மெதுவாக வெளியே வரும் போது மரத்தின் பின்பு ஒளிந்த நபர் ஓடி வந்து சரமாரியாக வெட்டுகிறார். இதை அங்கிருந்த மக்கள் பார்த்தபடி இருக்கிறார்கள். நெஞ்சை பதை பதைக்கவைக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

 

(Visited 5 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content