பொழுதுபோக்கு

ஹீரோவாக பாஸ் ஆனாரா பாலா? காந்தி கண்ணாடி விமர்சனம்

மூத்த ஜோடியான காந்தி மற்றும் கண்ணம்மா அறுபதாம் கல்யாணம் ஒன்றிற்கு செல்கின்றனர். அந்த கல்யாணத்தை பார்த்த கண்ணம்மாவுக்கு நமக்கு ஒரு பிள்ளை இருந்திருந்தா இதுபோல் நமக்கும் ஒரு திருமணம் செய்து வைத்திருப்பான் என காந்தியிடம் ஃபீல் பண்ணுகிறார்.

காந்தியின் உலகமே கண்ணம்மா தான், அவரின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுக்கிறார் காந்தி. இதற்காக ஊரில் இருக்கும் தனக்கு சொந்தமான ஜமீன் சொத்தை விற்று 80 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்கிறார்.

அந்த பணத்தை எடுத்துக் கொண்டு கல்யாணத்திற்கான A டூ Z வேலைகளை செய்யும் இளம் காதல் ஜோடியான கதிர் மற்றும் கீதாவை சந்தித்து தனது அறுபதாம் கல்யாண விழாவுக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறுகிறார்.

அவர்களும் அதற்கான வேலைகளில் இறங்குகின்றனர் அப்போது ஒரு சிக்கல் வருகிறது. இதனால் அறுபதாம் கல்யாணம் நடத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இந்த தடைகளை மீறி அந்த கல்யாணம் நடந்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.

மூத்த தம்பதியராக காந்தி, கண்ணம்மா கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா நடித்திருக்கிறார்கள். காமெடி வேடங்களில் மட்டும் நடித்து வந்த பாலா இப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். முதல் படத்திலேயே நியாயமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து இருக்கிறார்.

கிளைமாக்ஸில் நடு ரோட்டில் பாலா ஆடும் ஆட்டம் கண்களை குளமாக்குகிறது. கதாநாயகியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி, தனக்கு கொடுக்கப்பட்ட ரோலை அழகு பதுமையோடு சிறப்பாக செய்துள்ளார்.

மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு உத்தரவு மக்களை எந்த மாதிரி வாட்டி வதைத்தது என்பதை மீண்டும் கண் முன் கொண்டு வந்திருக்கிறது இந்த காந்தி கண்ணாடி.

அமுதவாணன், மதன், நிகிலா ஆகியோரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். ஜெய் கிரண் தயாரித்துள்ளார். விவேக் மெர்வின் இசை ஒவ்வொரு காட்சியையும் தூக்கி நிறுத்துகிறது. பாலாஜி கே ராஜாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. குறைந்த அளவிலான நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு குடும்பத்தையே கவரும் வகையில் படத்தை இயக்கிய ஷெரிப், முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். மொத்தத்தில் காந்தி கண்ணாடி மக்களின் முகமாக பிரதீபலிக்கிறது.

(Visited 9 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்