ஐரோப்பா

பிரான்ஸில் மாயமான இளைஞன் – நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸ் தலைநகர் பரிசில் உள்ள சென்ரெனிஸ் ஆற்றில் இருந்து இளம் நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றுக்குச் சென்றிருந்த இளம் நபர் ஒருவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

25 வயதுடைய ஜோசப் என்பவரே காணாமல் போனவராவார். இந்நிலையில், மேற்குறித்த சடலம் அவராக இருக்கலாம் என சந்தேகிகப்படுகிறது.

இது தொடர்பிலான உண்மைத்தன்மையை அறிய உடற்கூறு பரிசோதனைகளுக்கான சடலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஜோசப் கடந்த ஜனவரி 6 ஆம் திகதி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர். முந்தைய நாள் இரவில் நண்பர்களுடன் இரவு விடுதியில் மது அருந்திவிட்டு காலையில் வீட்டுக்குத் திரும்புவதாக தெரிவித்து விட்டு அவர் புறப்பட்டதாக நண்பர்கள் தெரிவித்தனர்.

ஜோசப் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்