உலகம்

நரியால் இலங்கை விமானத்திற்கு ஏற்படவிருந்த பேரழிவு – மயிரிழையில் தப்பிய பயணிகள்

இலங்கையில் இருந்து 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற Fits Airlines விமானம் தரையிறங்கும் போது நரி ஒன்று ஓடுபாதையில் நுழைந்தமையால் ஏற்படவிருந்த பாரிய விபத்து விமானியின் விரைவான செயற்பாட்டால் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பங்களாதேஷின் ஹஸ்ரத் ஷாஜலால்(Hazrat Shahjalal) சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(10) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

200க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் தரையிறங்கும் போது நரி ஒன்று திடீரென ஓடுபாதையில் ஓடி, தரையிறங்கும் கியரில் சிக்கிக் கொண்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானியின் விரைவான செயற்பாடு மற்றும் தொழில்நுட்பத் திறன் காரணமாக விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விமான நிலைய ஊழியர்கள் விலங்கை அகற்றியுள்ளனர்.

பல விமான நிலைய அதிகாரிகள் இச் சம்பவத்தை உறுதிப்படுத்தினர். அத்துடன், பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்து பாரிய விபத்தைத் தடுக்க எடுத்த முயற்சியைப் பாராட்டினர்.

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!