இலங்கை செய்தி

நான்கு மாத குழந்தையை பணயக் கைதியாக வைத்து இளம் தாய் துஷ்பிரயோகம் – பூகொட நடந்த கொடூரம்

பூகொட அம்பகஹவத்த பிரதேசத்தில் குழந்தையை பணயக்கைதியாக பிடித்து தாயை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இதில் தொடர்புடைய மற்றுமொரு இளைஞனைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது, ​​குறித்த பெண் தனது நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டினுள் நுழைந்த சந்தேகநபர்கள் மூவரும் நான்கு மாதக் குழந்தையைப் பணயக் கைதியாகப் பிடித்து தாயை பயமுறுத்தி துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தை எதிர்கொண்ட 23 வயதுடைய பெண்ணின் கணவர் சந்தையில் பொருட்களை விற்பனை செய்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பூகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content