உலகம்

கலிஃபோர்னியாவில் பற்றி எரியும் காடுகள் : ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ காரணமாக மக்கள் பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த வார இறுதியில் கலிபோர்னியா, ஓரிகான் மற்றும் நெவாடா முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லைன் ஃபயர் என்று அழைக்கப்படும் தீயானது, LA க்கு கிழக்கே சுமார் 65 மைல் (105 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள சான் பெர்னார்டினோ தேசிய வனத்தின் விளிம்பில் கட்டுப்பாடில்லாமல் பரவியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அத்துடன் தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட தீ 20,500 ஏக்கருக்கு மேல் பரவியுள்ளது. கடந்த வியாழக்கிழமை பரவ ஆரம்பித்த தீயானது தற்போதுவரையில் கட்டுப்பாடில்லாமல் பரவி வருகின்றது.

இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தீ பரவலுக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!