ஆசியா

இந்தோனீசியாவில் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 27 பேர் மரணம்

இந்தோனீசியாவின் வடசுமத்திரா மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் ஆகியவற்றின் காரணமாக குறைந்தது 27 பேர் உயிரிழந்து விட்டதாக நவம்பர் 28ஆம் திகதியன்று தெரிவிக்கப்பட்டது.

நிலச்சரிவு ஏற்பட்டு சிறு பேருந்து ஒன்று மண்ணில் புதையுண்டதாக அதிகாரிகள் கூறினர்.பேருந்தில் இருந்தோரைத் தேடி மீட்கும் பணிகள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரத்திலிருந்து அந்த மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.இதனால் பல இடங்களில் திடீர் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

நவம்பர் 27ஆம் திகதியன்று டெலி செர்டாங் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேர் உயிரிழந்ததாகவும் 20 பேர் காயமடைந்ததாகவும் வடசுமத்திரா காவல்துறை செய்தித்தொடர்பாளர் ஹாடி வாயுடி தெரிவித்தார்.

திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என்று அவர் கூறினார்.அவர்களைத் தேடி மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கடந்த வாரயிறுதியில் மீட்புப் பணியாளர்கள் 20 சடலங்களைக் கண்டெடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.மாயமான இருவரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம் காரணமாக வீடுகள், பள்ளிவாசல்கள், வயல்கள் சேதமடைந்தன.

(Visited 26 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!