ஐந்து மீனவர்களுடன் மாயமான பல நாள் மீன்பிடிபடகு
மாத்தறை, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற பல நாள் மீன்பிடி படகு ஒன்று காணாமற் போயுள்ளது.
‘இதுரங்கி 1’ எனும் பலநாள் மீன்பிடிப் படகொன்றே இவ்வாறு காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த படகில் ஐந்து மீனவர்கள் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படகு கடந்த கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் காணாமற் போயுள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 6 ஆம் திகதி இறுதியாக அவர்களிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், அன்று முதல் இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் காணாமற் போன மீனவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.





