இலங்கை செய்தி

ஐந்து மீனவர்களுடன் மாயமான பல நாள் மீன்பிடிபடகு

மாத்தறை, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற பல நாள் மீன்பிடி படகு ஒன்று காணாமற் போயுள்ளது.

‘இதுரங்கி 1’ எனும் பலநாள் மீன்பிடிப் படகொன்றே இவ்வாறு காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த படகில் ஐந்து மீனவர்கள் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த படகு கடந்த கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் காணாமற் போயுள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 6 ஆம் திகதி இறுதியாக அவர்களிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், அன்று முதல் இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் காணாமற் போன மீனவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!