ஈக்வடாரில் கரையொதுங்கிய மீன் : இயற்கை அழிவை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் மக்கள்!

ஈக்வடாரில் உள்ள கடலோர நகரமான சலினாஸில் மூன்று மீட்டர் நீளமுள்ள துருவ மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
மணலில் ஆழ்கடல் மிருகத்தை கண்டு விடுமுறைக்கு வந்தவர்களும், உள்ளூர் மக்களும் திகைத்தனர். அரிதாகக் காணப்படும் இவ்வகையான மீனை புகைப்படம் எடுப்பதற்காக பலர் ஒன்றுக்கூடினர்.
நிலநடுக்கங்களின் முன்னோடியாகக் கருதப்படும் இவ்வகை மீன்கள் இயற்கை பேரழிவு அந்தப் பகுதியைத் தாக்கப்போவதை முன்கூட்டியே அறிவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓர்ஃபிஷ் கடலின் மிக நீளமான மீன்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது மற்றும் 17 மீட்டர் நீளம் மற்றும் 441 பவுண்டுகளுக்கு மேல் எடையுள்ளதாக இருக்கும்.
(Visited 11 times, 1 visits today)