இலங்கை செய்தி

கிளிநொச்சியில் துப்பாகிச் சூடு – ஒருவர் படுகாயம்

மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடாத்தியதில் , நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். டிப்பரில் இருந்த மேலும் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பூநகரி பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் வந்த டிப்பர் வாகனத்தினை மறித்த வேளை , வாகனத்தினை நிறுத்தாது , பொலிசாரை மோதி தள்ளும் விதமாக வாகனத்தை சாரதி செலுத்தியுள்ளார்.

உடனே சுதாகரித்துக்கொண்ட பொலிஸார் டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதன் போது சாரதிக்கு உதவியாக செயற்பட்ட கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞன் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த இளைஞனை மீட்டு , வைத்தியசாலையில் அனுமதித்த பொலிஸார் , டிப்பர் சாரதியையும் மேலும் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content