கிழக்கு ஆப்பிரிக்காவில் பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து: 17 மாணவர்கள் உடல் கருகி பலி

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கென்யா- நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பள்ளியில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும் 14 மாணவர்கள் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உள்ளூர் நேரப்படி நள்ளிரவில் தீப்பிடித்தபோது விடுதியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர்
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் பள்ளி விடுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்து காயமடைந்த மாணவர்களை மீட்டனர்.
மீட்கப்பட்ட மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Visited 41 times, 1 visits today)