கொழும்பு-கண்டி வீதியில் அமைந்துள்ள 03 மாடிக் கட்டிடத்தில் தீவிபத்து!
கொழும்பு-கண்டி பிரதான சாலையில், நிட்டம்புவ, திஹாரியவில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்து தற்போது முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மின்சாதனங்களை விற்பனை செய்யும் கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
கம்பஹா தீயணைப்புப் படையின் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சுமார் 30 நிமிடங்களுக்குள் தீயைக் கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் விளைவாக, கீழ் தளங்களுக்கு தீ பரவுவது வெற்றிகரமாகத் தடுக்கப்பட்டது.
இதற்கிடையே தீவிபத்தினால் கொழும்பு-கண்டி பிரதான சாலையின் ஒரு பாதை தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்தினால் ஏற்பட்ட சேதத்தின் அளவு மதிப்பிடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





