ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி

ஆஸ்திரேலியாவில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியர்களுக்கு பல வாழ்க்கைச் செலவு நிவாரணங்களை பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பிரதமர், புதிய ஆண்டில் பணவீக்கத்தைக் குறைப்பதற்கு அதிக முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார்.

மே மாதம் அறிவிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தேவையான நிவாரணப் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கருவூலத்தையும் நிதி நிறுவனங்களையும் அந்தோனி அல்பானீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

வேலையில்லா திண்டாட்டம், தொழிலாளர் சந்தையில் பற்றாக்குறை, விநியோகச் சங்கிலியில் உள்ள வரம்புகள் உள்ளிட்ட நீண்ட கால பிரச்னைகளுக்கு இந்த ஆண்டு பட்ஜெட் அதிக கவனம் செலுத்தப் போகிறது.

அதற்கான கொள்கை தீர்வுகள் அறிவிக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார்.

இது தவிர எரிசக்தி உள்ளிட்ட கட்டணச் சலுகைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!