இலங்கை

IMF உடனான இறுதி பேச்சுவார்த்தை : இலங்கைக்கு கைக்கொடுக்குமா?

சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்தின் வருவாய் பற்றாக்குறை குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று (26.09) இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பான மீளாய்வு வேலைத்திட்டத்தின் இறுதி கலந்துரையாடல் சுற்று நேற்று இடம்பெற்றது.

இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் பல நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளதாகவும், உள்ளூர் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் பிரதிநிதிகளால் பாராட்டப்பட்டுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் இவ்வருட வருமானப் பற்றாக்குறை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கவலை வெளியிட்டதுடன், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அலுவலகத்துடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்