பொழுதுபோக்கு

பராசக்தி ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயனுக்கு என்ன ஆச்சி?

சிவகார்த்திகேயன் நடித்துக்கும் பராசக்தி படத்தின் ஷூட்டிங்கில் இறுதி கட்ட சண்டை காட்சியில் நடந்த அடிதடியால் அந்த இடமே ரணகளம் ஆகிவிட்டது.

திருநெல்வேலி, மதுரை என தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பராசக்தி படத்தின் ஷூட்டிங்கை சுதா கங்கரா நடத்திக் கொண்டு வருகிறார். பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடித்த நிலையில் சில சிவகார்த்திகேயன் சண்டை காட்சிகள் மட்டும் மிக பிரம்மாண்டமாக எடுத்து வருகின்றனர்.

துணிவு, விடா முயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த சுப்ரீம் சுந்தர்தான் பராசக்தி படத்திற்கும் சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்.

பராசக்தி படத்தின் சண்டைக் காட்சிகளில் சிவகார்த்திகேயன் டூப் இல்லாமல் அவரே சண்டை போட்டுள்ளார். அப்பொழுது மேலிருந்து கீழே குதிக்கும் பொழுது கை, கால் என இரண்டு இடங்களிலும் அடிபட்டுள்ளது.

அதில் அவருக்கு வலது கையில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது, இருந்தாலும் அதனை பொறுத்துக் கொண்டு அன்றைய நாள் சூட்டிங் முடித்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

ஆனால் இதற்கு மேல் நடிக்க முடியாது எனவும் ஒரு வாரமாவது பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் எனவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். அதனால் சுதா கொங்கரா படத்தின் மற்ற காட்சிகளை எடுத்து வருகிறார்.

(Visited 3 times, 3 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்