உலகம்

மத்திய கிழக்கில் போர் அச்சம்: வெளிநாட்டவர் லெபனானைவிட்டு வெளியேற அறிவுறுத்தல்

ஈரான் – இஸ்ரேல் இடையே எப்போதும் போர் மூளலாம் என எதிர்பார்க்கப்படுவதால், லெபனானிலுள்ள தங்கள் குடிமக்கள் உடனடியாக அந்நாட்டைவிட்டு வெளியேறும்படி பல நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில், சவூதி அரேபியாவும் பிரான்சும் அப்பட்டியலில் இணைந்துள்ளன.

கொந்தளிப்பான சூழல் நிலவுவதால் லெபனான் செல்வதைத் தவிர்க்கும்படி பிரெஞ்சு வெளியுறவு அமைச்சு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.அத்துடன், ஈரானில் வசிக்கும் தன் குடிமக்களும் தற்காலிகமாக அங்கிருந்து வெளியேறும்படி பிரான்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

மேற்கத்திய விமான நிறுவனங்கள் பலவும் லெபனானுக்கும் அவ்வட்டாரத்திலுள்ள மற்ற விமான நிலையங்களுக்குமான தங்களது சேவைகளை நிறுத்திவைத்துள்ளன.தோஹா – பெய்ருட் தடத்தில் பகல் நேரத்தில் மட்டுமே விமானங்கள் இயக்கப்படும் என்று கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

இதனிடையே, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகள் இஸ்ரேல்மீது தாக்குதல் தொடுத்தால், அதற்காக அவை பெருவிலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேல் பாதகாப்பு அமைச்சர் யொவாவ் கேலன்ட் எச்சரித்துள்ளார்.ஆனால், வட்டாரத்தில் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை என்றும் அதே நேரத்தில் மேலும் நிச்சயமற்ற நிலை ஏற்படாமல் தடுக்க இஸ்ரேலைத் தண்டிப்பது அவசியம் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

US, UK and France ask their citizens to leave Lebanon as war fears loom

இதற்கிடையே, தன் நாட்டின் தெற்குப் பகுதியில் திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 5) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக லெபனான் தெரிவித்துள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கும் லெபனான் தலைநகர் பெய்ருட்டில் ஹிஸ்புல்லா ராணுவத் தளபதி ஃபுவாத் சுக்கர் கொல்லப்பட்டதற்கும் இஸ்ரேலைப் பழிவாங்க ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளன. இதையடுத்து, அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், லெபனான் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நிகழ்த்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.அதே நேரத்தில், லெபனானிலிருந்து வந்த 30 எறிகணைகளை இடைமறித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் முதல் நிகழ்ந்துவரும் ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான சண்டையில் லெபனானில் 549 பேர் கொல்லப்பட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத் தரவுகள் தெரிவிக்கின்றன. அவர்களில் குறைந்தது 115 பேர் அப்பாவிப் பொதுமக்கள் எனக் கூறப்படுகிறது.தொடர்ந்து பதற்றநிலை அதிகரித்து வருவதால், போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பு மங்கி வருவதாகச் சொல்லப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content