தமிழ்நாடு

கூடுதலாக சாம்பார் தர மறுத்ததால் ஹோட்டல் ஊழியரை கொலை செய்த தந்தை,மகன்!!

சென்னையில் உணவு பார்சல் வாங்கும்போது கூடுதல் சாம்பார் தர மறுத்ததால் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை பம்மல் பகுதியில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவர் அருண்.குறித்த உணவகத்திற்கு சங்கர் என்பவர் தனது மகன் அருண்குமாருடன் உணவு பார்சல் வாங்க வந்துள்ளார். அப்போது கூடுதலாக உணவிற்கு சாம்பார் கேட்டுள்ளனர்.

அதற்கு மேற்பார்வையாளர் அருண் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியுள்ளது.

அப்போது அருண்குமாரும், சங்கரும் தாக்கியதில் அருண் கீழே விழுந்ததில், அவருக்கு தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சங்கர் மற்றும் அவருடைய மகன் அருண்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கூடுதல் சாம்பார் தர மறுத்த ஊழியர் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!