உலகம்

இந்தோனேசியாவில் கோர விபத்து – 15 பேர் பலி!

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

34 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்து கான்கிரீட் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து (Jakarta) நாட்டின் பண்டைய அரச நகரமான யோககர்த்தாவுக்குச் (Yogyakarta) சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் பேருந்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!