அவிசாவளை பகுதியில் கோர விபத்து – மூவர் பலி
அவிசாவளை,அமிதிரிகல பகுதியில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர்.
விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் காரில் நால்வர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





