இலங்கை

பிரபல நாடக நடிகர் சுமிந்த சிறிசேன மறைவு… திரையுலகினர் அஞ்சலி!

இலங்கையின் பிரபல திரைப்பட மற்றும் நாடக நடிகர் சுமிந்த சிறிசேன நேற்று காலமானார். அவருக்கு வயது 75.

இலங்கை திரையுலகின் முன்னோடியான நாடகக் கலையில் கோலோச்சிய பலரில் முக்கியமானவர் நடிகர் சுமிந்த சிறிசேன. ரயில்வேயில் பணியாளராக வாழ்கையைத் தொடங்கிய அவர், வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு திரும்பிய பின்னர் பல்வேறு நாடகங்களில் நடித்து வந்தார். குறிப்பாக அவர் நடித்த ’ரங்க சில்ப சாலிக’ என்ற நாடகம் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்தது.

இதையடுத்து, பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றி நடித்துள்ள சுமிந்த, தேசிய விருதுகள், சர்வதேச விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். இலங்கை அரசின் தொலைக்காட்சியான ரூபவாஹினியில் அவர் நடித்த தொலைக்காட்சி தொடர்கள், இன்றும் அவரை மக்களிடையே நினைவில் வைத்திருகிறது.

நடிகர் சுமிந்த சிறிசேன

கடந்த 2022-ம் ஆண்டு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அதன் பின்னர் உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொழும்பில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது மறைவிற்கு திரைபிரபலங்கள் மற்றும் திரைப்படத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இளவயதில் ஜனத விமுக்தி பெரமுனா அமைப்பின் ஆதரவாளராக இருந்த சுமிந்த, அந்த அமைப்பு ஆயுத கலாச்சாரத்தை கையில் எடுத்ததும், அதிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content