பொழுதுபோக்கு

பி.சுசீலா அம்மா திருப்பதியில் செய்த செயலைப் பாருங்கள்…

1950 முதல் 1990 வரை தென்னிந்தியாவின் மிகவும் வெற்றிகரமான பின்னணிப் பாடகியாகத் திகழ்ந்தவர் பி சுசீலா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும், 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி இருக்கும் பி.சுசீலா, வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருக்கிறார்.

தற்போது பி.சுசீலா, திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்து முடி காணிக்கை செலுத்தி இருக்கிறார்.

ஏழுமலையானை வழிபட்ட பின் கோவில் வளாகத்தில் இரண்டு பேரின் துணையுடன் நடக்கமுடியாமல் வந்த பி சுசீலா, நாராயண மந்திரம் என்ற பக்தி பாடலை மூச்சு இறைக்க பாடிக்கொண்டு வந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், அவரின் தீவிர ரசிகர்கள் அவர் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.

(Visited 12 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்