இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : நாட்டு மக்களின் கருத்துக்களை பெற நடவடிக்கை!

நியூடைமன் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து குறித்து நாட்டு மக்களின் கருத்துக்களை பெறுவதற்கும், அது தொடர்பான பத்திரிக்கை விளம்பரங்களை வெளியிடுவதற்கும் இரண்டு வார கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது. இதன்போது குறித்த கப்பல் தொடர்பில் ஆராய்ந்து தேவையான விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு கடந்த வாரம் அதன் தலைவர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தலைமையில் முதல் தடவையாக கூடியது. குழுவின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த அடிப்படை விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகளை தவிர்ப்பதற்கும் அவ்வாறான அவசர நிலையை எதிர்கொள்வதற்கும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்தக் குழு பரிந்துரைகளை வழங்கும் என்றும் தலைவர் தெரிவித்தார்.

குழுவின் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கும் அது தொடர்பான பத்திரிகை விளம்பரங்களை வெளியிடுவதற்கும் இரண்டு வார கால அவகாசம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content