வெளிநாட்டில் இருந்து ஆதரவளிப்பது கூட ஈரானில் இருக்கும் உறவினர்களுக்கு ஆபத்து
தங்கள் தாயகத்தில் உள்ள உறவினர்கள் அமைதியும் உரிமைகளும் வேண்டி போராடுவதால் உயிரிழந்து வருவதாக வடக்கு அயர்லாந்தில் வாழும் ஈரானியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பெல்ஃபாஸ்டின் (Belfast) நகர மண்டபத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 50 பேர் பங்கேற்று, ஈரானை விடுவிக்க சர்வதேச சமூகத்தின் ஆதரவை கோரினர்.
ஈரானில் பொருளாதார நிலைமைகள் மோசமடைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களை அரசு வன்முறையுடன் அடக்கியதன் பின்னணியில் இந்த போராட்டம் இடம்பெற்றது.
வெளிநாட்டில் இருந்து ஆதரவளிப்பது கூட ஈரானில் இருக்கும் உறவினர்களுக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாகவும் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
ஆட்சி மாற்றமே ஈரானுக்கும் உலகிற்கும் சிறந்ததாக அமையும் என போராட்டக்கார்கள் தெரிவித்துள்ளனர்.





