“கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றினாலும் ஆபத்து நீங்காது”
கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆசியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
இந்நிலையில் ஈரானின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றும் நோக்கில் டொனால்ட் டிரம்ப் விடுத்த அறிக்கை பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை (Kharg Island) ஆக்கிரமிக்க அமெரிக்கா திட்டமிடக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையைப் போல இது எளிதானதாக இருக்காது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த தீவை அமெரிக்கா கைப்பற்றினாலும், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஈரானின் கட்டுப்பாட்டில் இருப்பதால் எண்ணெய் கப்பல்களின் பாதுகாப்பு தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.





