போர் முடிவுக்குவர வேண்டும்: EU தலைவர் வலியுறுத்து!
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் Ursula von der Leyen, வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் போர் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கங்கள் குறித்து அவர் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, சர்வதேச வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பதற்கான பணிகளில் சில ஐரோப்பிய நாடுகள் ஈடுபடத் தயாராக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் விலையேற்றம் மற்றும் வணிகப் பாதிப்புகளைத் தவிர்க்க போர் நிறுத்தத்தை எட்ட வேண்டியது மிகவும் அவசியம் என்று அவர் ஆஸ்திரேலியப் பிரதமருடனான சந்திப்பில் எடுத்துரைத்தார்.




