இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

அயோத்தியின் ராமர் கோயிலுக்கு விஜயம் செய்த எலோன் மஸ்க்கின் தந்தை

தொழில்நுட்ப கோடீஸ்வரர் எலோன் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்குச் சென்று, “அற்புதம்” என்றும், தான் இதுவரை செய்த “சிறந்த காரியங்களில்” ஒன்று என்றும் விவரித்துள்ளார்.

அருகிலுள்ள ஹனுமன்கர்ஹி கோயிலிலும் எரோல் வழிபாடு நடத்தினார். ஆரம்பத்தில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலையும் பார்வையிட திட்டமிடப்பட்டிருந்தார், ஆனால் இப்பகுதியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

“நான் இதை பார்க்க வந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், கோயில் நிறைவடையும் வரை காத்திருக்க முடியாது, பெரிய கோயில், இது உலகின் ஒரு அதிசயம் போன்றதாக இருக்கப் போகிறது,” என்று எரோல் குறிப்பிட்டுள்ளார்.

தனித்தனியாக, இரண்டு கோயில்களையும் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவில் எனது அனுபவம் அற்புதமாக இருந்தது. இந்தியாவில் நிறைய நேரம் செலவிட ஆவலுடன் காத்திருக்கிறேன்” தெரிவித்துள்ளார்.

இந்த வருகையின் போது கோயில் நகரத்தில் பாதுகாப்பு அதிக அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!