இலங்கை

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம்!

அம்பாறை மாவட்டம் – பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு தொகைப்பணத்துடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

760 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் உட்பட ஒரு தொகைப்பணமும் குறித்த சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பெரிய நீலாவணை- வீ.சி.வீதியைச்சேர்ந்த 36 வயதுடையவர் எனவும் இதற்கு முன்னரும் இச்சந்தேக நபர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குபட்பட்ட கல்முனைக்குடி-3 பிரிவு, கடற்கரை வீதியிலுள்ள பள்ளிவாசலிற்கு அருகில்  27 வயதுடைய சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து  1,800 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்