போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ட்ரோன் தாக்குதல்கள்!
போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க மற்றும் உக்ரைனிய அதிகாரிகள் நடத்திய மூன்றாவது நாள் பேச்சுவார்த்தை இன்று நிறைவடைந்துள்ளது.
இருப்பினும் இரவு முழுவதும் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனின் வடக்கு செர்னிஹிவ் (Chernihiv) பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் மத்திய நகரமான கிரெமென்சுக்கில் (Kremenchuk) உள்கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் கியேவ் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகள் ரஷ்யா உக்ரைனிய மின் கட்டமைப்பை முடக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
குளிர்காலத்தில் உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தொடர்ச்சியான தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.





