ஐரோப்பா

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ட்ரோன் தாக்குதல்கள்!

போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க மற்றும் உக்ரைனிய அதிகாரிகள் நடத்திய மூன்றாவது நாள் பேச்சுவார்த்தை இன்று நிறைவடைந்துள்ளது.

இருப்பினும் இரவு முழுவதும் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைனின் வடக்கு செர்னிஹிவ் (Chernihiv) பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் மத்திய நகரமான கிரெமென்சுக்கில் (Kremenchuk)  உள்கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில்  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில் கியேவ் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகள் ரஷ்யா உக்ரைனிய மின் கட்டமைப்பை முடக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

குளிர்காலத்தில்  உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தொடர்ச்சியான தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!