ஐரோப்பா

இலங்கையின் 12 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை!

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரை 48,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 156,000 பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், விலங்குகளுக்கான குடிநீர் பிரச்சினையும் உள்ளது. மேலும், வனப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகளின் பொறுப்பான முகமைகள் பவுசர்கள் மூலம் தண்ணீர் வழங்குவதற்கு உழைத்து வருகின்றன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் குடிநீரை வழங்க அரசாங்கம் 2 மில்லியனுக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது. எனினும், அந்த மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 23 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்