இலங்கை

மத்திய மாகாணத்தில் பேரிழப்பு: 351 பேர் உயிரிழப்பு! 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!

டித்வா புயலையடுத்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் மத்திய மாகாணம் பேரிழப்பை சந்தித்துள்ளது.

உயிரிழப்பு மற்றும் உடமை இழப்பு என்பன இம்மாகாணத்திலேயே அதிகளவு இடம்பெற்றுள்ளன.

இலங்கையில் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதே மத்திய மாகாணமாகும்.

கண்டி மாவட்டத்தில் 234 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர், மாத்தளை மாவட்டத்தில் 28 பேர் என பேரிடரால் மத்திய மாகாணத்தில் 351 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்படி மூன்று மாவட்டங்களிலும் மொத்தமாக 127 பேர் காணாமல்போயுள்ளனர்.

நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 2 ஆயிரத்து 777 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

20 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

அதேவேளை, மத்திய மாகாணத்தில் பாரிய வீதிகள், ரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளன. விவசாய நிலங்களும் அழிவடைந்துள்ளன.

Saranya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!