பொழுதுபோக்கு

கணவரை பிரிந்தாரா ஹன்சிகா? அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவர் விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த இவர், திடீரென சினிமாவிலிருந்து பீல்ட் அவுட் ஆகியுள்ளார். மீண்டும் கம் பேக் கொடுப்பார் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை ஹன்சிகா கடந்த 2022ல் தனது நீண்ட நாள் காதலர் சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் இருக்கும் கோட்டையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது.

ஹன்சிகாவின் நெருங்கிய தோழியின் முன்னாள் கணவர்தான் இந்த சோஹைல் என்பதால், அந்த செய்தி இணையத்தில் வைரலானது. இதனால் நடிகை ஹன்சிகாவை அதிகம் ட்ரோல் செய்தனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில், நடிகை ஹன்சிகா தற்போது அவரது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் பரவி வருகிறது.

ஹன்சிகா மோத்வானி தனது கணவர் வீட்டிலிருந்து வெளியேறி, தற்போது தனது அம்மா வீட்டில் வசித்து வருவதாக பாலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இது உண்மையா இல்லை வதந்தியா என்பதை ஹன்சிகாதான் விளக்கம் கொடுக்க வேண்டும்.

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்