பொழுதுபோக்கு

கொச்சைப்படுத்திய நயன்தாரா… மௌனம் கலைத்தார் தனுஷ்

தனுஷ், நயன்தாரா விக்னேஷ் சிவன் இவர்களின் சண்டைதான் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் பெரும் பேசுபொருளாக இருக்கின்றது.

தனுஷ் தங்களை இரண்டு வருட காலமாக துன்பப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று நயன்தாரா வெளிப்படையாக சொல்லிவிட்டார்.

அது மட்டும் இன்றி தனுஷ் தானாக முன்னுக்கு வரவில்லை அவருடைய அப்பா மற்றும் அண்ணன் இருவராலும் தான் இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறார். அவர்கள் இல்லை என்றால் தனுஷ் என்ற ஒருவர் எங்கேயும் இருந்திருக்க மாட்டார் என்றெல்லாம் நயன்தாரா வெளியிட்ட லெட்டர் பேடில் குறிப்பிட்டிருந்தார்.

கடின உழைப்பாலும் 15 வருட போராட்டத்தாலும் தான் நான் இந்த இடத்தை அடைந்திருக்கிறேன், உங்களுக்கு அமைந்தது போல் எளிதில் அரியாசனம் கிடைக்கவில்லை என்றெல்லாம் நயன்தாரா ஒரே போடாக போட்டு தனுசை அசிங்கப்படுத்தி விட்டார்.

இதனால் ஆவேசம் அடைந்த தனுஷ் அவர் பக்கமுள்ள நியாயத்தையும் கூறி வருகிறார்.

அப்பா அண்ணனால் வளரவில்லை தன்னுடைய கடினமான உழைப்பால் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று தனுஷ் பலமுறை நிரூபித்து விட்டார்.

இதேவேளை, இன்றைய பல முன்னணி நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தி, அவர்களை வளர்த்து விட்டது தனுஷ் தான்.

இப்படி யாராவது ஒருவர் நயன்தாராவால் வாழ்ந்தவர்கள், வளர்ந்தவர்கள் இருக்கின்றனரா? என்றும் சிலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

(Visited 62 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!